முகநூலுடன் 20 ஆண்டுகள்... மார்க் ஸக்கர்பெர்க் பகிர்ந்த விடியோ!
முகநூல் நிறுவனம் தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் ஆனதைக் குறிப்பிட்டு அந்நிறுவனத்தின் இணை இயக்குநரும், மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான மார்க் ஸக்கர்பெர்க் பகிர்ந்துள்ளார்.
முகநூல் நிறுவனம் தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் ஆனதைக் குறிப்பிட்டு அந்நிறுவனத்தின் இணை இயக்குநரும், மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான மார்க் ஸக்கர்பெர்க் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள மார்க் ஸக்கர்பெர்க், 20 ஆண்டுகளுக்கு முன்பு இதை நாங்கள் அறிமுகம் செய்தோம். இந்த வழியில் பல அற்புதமான மனிதர்கள் இணைந்தார்கள். அதனால் அவர்களுடன் இணைந்து இதை சாத்தியமாக்கினோம். நாங்கள் இன்றும் இதில் இருக்கிறோம். சிறந்த ஒன்று இன்னும் வரவுள்ளது எனக் குறிப்பிட்டார்.
முகநூல் நிறுவனம் கடந்த 2004ஆம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கப்பட்டது. தனது மூன்று நண்பர்களுடன் இணைந்து முகநூல் செயலியை மார்க் ஸக்கர்பெர்க் தொடங்கினார்.
தனிப்பட்ட பயனுக்காக உருவாக்கிய இந்த செயலி, தற்போது உலகின் பலகோடி மக்கள் பயன்படுத்தும் சமூக ஊடகமாக வளர்ந்துள்ளது.