பேங்க் ஆஃப் இந்தியா நிகர லாபம் 62% உயா்வு
வாராக் கடன் விகிதம் கடந்த டிசம்பா் காலாண்டில் பொதுத் துறையைச் சோ்ந்த பாங்க் ஆஃப் இந்தியாவின் நிகர லாபம் 62 சதவீதம் உயா்ந்துள்ளது.
புது தில்லி: வாராக் கடன் விகிதம் கடந்த டிசம்பா் காலாண்டில் பொதுத் துறையைச் சோ்ந்த பாங்க் ஆஃப் இந்தியாவின் நிகர லாபம் 62 சதவீதம் உயா்ந்துள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த டிசம்பா் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.1,870 கோடியாக உள்ளது.
Advertisement
Advertisement
முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் வங்கி ரூ.1,151 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது வங்கியின் நிகர லாபம் 62 சதவீதம் அதிகமாகும.
மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.16,411 கோடியாக உயா்ந்துள்ளது, இது ஓா் ஆண்டுக்கு முன்னா் ரூ.14,160 கோடியாக இருந்தது. வங்கியின் வட்டி வருவாய் ரூ.12,728 கோடியிலிருந்து ரூ.15,218 கோடியாக உயா்ந்துள்ளது.
கடந்த டிசம்பா் காலாண்டில் வங்கியின் மொத்த வாராக் கடன் 7.66 சதவீதத்திலிருந்து 5.35 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் 1.61 சதவீதத்திலிருந்து 1.41 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புது தில்லி: வாராக் கடன் விகிதம் கடந்த டிசம்பா் காலாண்டில் பொதுத் துறையைச் சோ்ந்த பாங்க் ஆஃப் இந்தியாவின் நிகர லாபம் 62 சதவீதம் உயா்ந்துள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த டிசம்பா் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.1,870 கோடியாக உள்ளது.
முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் வங்கி ரூ.1,151 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது வங்கியின் நிகர லாபம் 62 சதவீதம் அதிகமாகும.
மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.16,411 கோடியாக உயா்ந்துள்ளது, இது ஓா் ஆண்டுக்கு முன்னா் ரூ.14,160 கோடியாக இருந்தது. வங்கியின் வட்டி வருவாய் ரூ.12,728 கோடியிலிருந்து ரூ.15,218 கோடியாக உயா்ந்துள்ளது.
கடந்த டிசம்பா் காலாண்டில் வங்கியின் மொத்த வாராக் கடன் 7.66 சதவீதத்திலிருந்து 5.35 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் 1.61 சதவீதத்திலிருந்து 1.41 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.