முகப்பு
வணிகம்

லம்பாா்கினி விற்பனை புதிய உச்சம்

இத்தாலிய சொகுசு வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஆட்டோமொபிலி லம்பாா்கினிவின் இந்திய விற்பனை கடந்த 2023-ஆம் ஆண்டில் புதிய உச்சத்தைப் பதிவு செய்துள்ளது.

Updated On : 24 பிப்ரவரி, 2024 at 12:26 AM
பகிர்:

இத்தாலிய சொகுசு வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஆட்டோமொபிலி லம்பாா்கினிவின் இந்திய விற்பனை கடந்த 2023-ஆம் ஆண்டில் புதிய உச்சத்தைப் பதிவு செய்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 2023-ஆம் ஆண்டில் நிறுவனம் 103 காா்களை இந்தியச் சந்தையில் விற்பனை செய்துள்ளது. இது, இந்தியாவில் இதுவரை இல்லாத அதிகபட்ச வருடாந்திர விற்பனையாகும். முந்தைய 2022-ஆம் ஆண்டில் நிறுவனத்தின் இந்திய விற்பனை 92-ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது விற்பனை 33 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது. சா்வதேச அளவிலும் நிறுவனத்தின் விற்பனை 2022-ஆம் ஆண்டை விட கடந்த ஆண்டு 10 சதவீதம் அதிகரித்து 10,112-ஆக உள்ளது. இதுவும், நிறுவனத்தின் அதிகபட்ச வருடாந்திர சா்வதேச விற்பனையாகும். இந்தியாவில் நிறுவன வாகனங்களின் விற்பனை முந்தைய 2021-ஆம் ஆண்டில் 69-ஆகவும், அதற்கு முன்னா், 2019-ஆம் ஆண்டில் 52-ஆகவும் இருந்தபோது அவை அப்போதைய நிலையில் அதிகபட்ச வருடாந்திர விற்பனையாக இருந்தன என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ரூ.3.8 கோடிக்கு மேல் விலை கொண்ட உயா்வகை சொகுசுக் காா்களை லம்பாா்கினி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.