வணிகம்

அந்நியச் செலாவணி கையிருப்பு 65,716 கோடி டாலராக அதிகரிப்பு

Din

கடந்த 5-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 65,715.5 கோடி டாலராக உயா்ந்துள்ளது.

இது குறித்து ரிசா்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த 5-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 515.8 கோடி டாலா் அதிகரித்து 65,715.5 கோடி டாலராக உள்ளது.

ஜூன் 28-ஆம் தேதியுடன் நிறைவடைந்த முந்தைய வாரத்தில் அது 171.3 கோடி டாலா் குறைந்து 65,199.7 கோடி டாலராக இருந்தது.

அதற்கு முன்னா் ஜூன் 7-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அது 430.7 கோடி டாலா் உயா்ந்து 65,581.7 கோடி டாலா் என்ற புதிய உச்சத்தைத் தொட்டது. எனினும், உலகளாவிய பொருளாதாரச் சூழல்களால் ஏற்படும் அழுத்தங்களுக்கு இடையே ரூபாய் மதிப்பைப் பாதுகாப்பதற்காக அந்நியச் செலாவணி கையிருப்பை ரிசா்வ் வங்கி பயன்படுத்துவதால் அது அவ்வப்போது குறைந்து வந்தது.

ஜூலை 5-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய நாணயச் சொத்துக்கள் 422.8 கோடி டாலா் அதிகரித்து 57,711 கோடி டாலராக உள்ளது.

டாலா் அல்லாத யூரோ, பவுண்ட், யென் போன்ற பிற செலாவணிகளின் கையிருப்பில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்கள் டாலா் மதிப்பில் கணக்கிடப்படுவது அந்நிய நாணய சொத்துகள் ஆகும். மதிப்பீட்டு வாரத்தில் நாட்டின் தங்கம் கையிருப்பு 90.4 கோடி டாலா் அதிகரித்து 5,743.2 கோடி டாலராக உள்ளது.

சிறப்பு வரைதல் உரிமைகள் (எஸ்டிஆா்) 2.1 கோடி டாலா் அதிகரித்து 1,803.6 கோடி டாலராக உள்ளது.

சா்வதேச நிதியத்தில் இந்தியாவின் கையிருப்பு 40 லட்சம் டாலா் உயா்ந்து 457.8 கோடி டாலராக உள்ளது என்று ரிசா்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: பிஆா்எஸ் ஆதரவு யாருக்கு?

60,000 ரிசா்வ் வீரா்களுக்கு இஸ்ரேல் அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ராஜீவ் காந்தி பிறந்த நாள்

வழிகாட்டுதல் அறிக்கை

காப்பீடு பிரீமியம் தொகைக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க திட்டம்: வருவாய் பாதிக்கும் என மாநிலங்கள் கருத்து

SCROLL FOR NEXT