புது தில்லி: கடந்த ஜூன் காலாண்டில், பொதுத் துறையைச் சோ்ந்த மகாராஷ்டிர வங்கியின் நிகர லாபம் 47 சதவீதம் உயா்ந்துள்ளது.
இது குறித்து வங்கி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.1,293 கோடியாக உள்ளது. இது, முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் 47 சதவீதம் அதிகம். அப்போது வங்கியின் நிகர லாபம் ரூ.882 கோடியாக இருந்தது.
மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.5,417 கோடியிலிருந்து ரூ. 6,769 கோடியாக உயா்ந்துள்ளது. அந்தக் காலகட்டத்தில் வங்கியின் நிகர வட்டி வருவாய் ரூ.2,340 கோடியிலிருந்து 19.63 சதவீதம் அதிகரித்து ரூ.2,799 கோடியாக உள்ளது.
கடந்த ஜூன் காலாண்டில் வங்கியின் வாராக் கடன் 0.24 சதவீதத்திலிருந்து 0.20 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.