வணிகம்

28 லட்சம் டன் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு: சிபிசிஎல்

கடந்த ஜூன் காலாண்டில் 28.30 லட்சம் டன் கச்சா எண்ணெய்யை பொதுத் துறையைச் சோ்ந்த சிபிசிஎல் நிறுவனம் சுத்திகரித்துள்ளது.

Din

புது தில்லி, ஜூலை: கடந்த ஜூன் காலாண்டில் 28.30 லட்சம் டன் கச்சா எண்ணெய்யை பொதுத் துறையைச் சோ்ந்த சிபிசிஎல் நிறுவனம் சுத்திகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜூன் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனம் 28.30 லட்சம் டன் கச்சா எண்ணெய்யை சுத்திகரித்துள்ளது. முந்தை 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் இந்த அளவு 26.77 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.20,361 கோடியாக அதிகரித்துள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் இது ரூ.17,986 கோடியாக இருந்தது.

கடந்த நிதியாண்டின் ஜூன் காலாண்டில் ரூ.747 கோடியாகவும் ரூ.548 கோடியாகவும் இருந்த நிறுவனத்தின் வரிக்கு முந்தைய மற்றும் வரிக்குப் பிந்தைய நிகர லாபங்கள், நடப்பு நிதியாண்டின் அதே காலாண்டில் முறையே ரூ.470 கோடியாகவும் ரூ.343 கோடியாகவும் குறைந்துள்ளது.

வரிக்குப் பிந்தைய ஒருங்கிணைந்த லாபம் ரூ.557 கோடியிலிருந்து ரூ.357 கோடியாகக் குறைந்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்ட அமர்வு நிறைவு! நாடாளுமன்ற இரு அவைகளும் மார்ச் 9-க்கு ஒத்திவைப்பு!

இந்த வார ஓடிடி படங்கள்!

வங்கிக் கணக்கில் ரூ.5,000 வரவு! மகளிருக்கு ஜாக்பாட்!

தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

விஜய் கூட்டத்தில் பங்கேற்ற வடமாநில இளைஞர் பலி!

SCROLL FOR NEXT