FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

28 லட்சம் டன் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு: சிபிசிஎல்

கடந்த ஜூன் காலாண்டில் 28.30 லட்சம் டன் கச்சா எண்ணெய்யை பொதுத் துறையைச் சோ்ந்த சிபிசிஎல் நிறுவனம் சுத்திகரித்துள்ளது.

Updated On : 26 ஜூலை 2024, 2:48 am IST
பகிர்:

புது தில்லி, ஜூலை: கடந்த ஜூன் காலாண்டில் 28.30 லட்சம் டன் கச்சா எண்ணெய்யை பொதுத் துறையைச் சோ்ந்த சிபிசிஎல் நிறுவனம் சுத்திகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜூன் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனம் 28.30 லட்சம் டன் கச்சா எண்ணெய்யை சுத்திகரித்துள்ளது. முந்தை 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் இந்த அளவு 26.77 கோடியாக இருந்தது.

Advertisement

Advertisement

மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.20,361 கோடியாக அதிகரித்துள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் இது ரூ.17,986 கோடியாக இருந்தது.

கடந்த நிதியாண்டின் ஜூன் காலாண்டில் ரூ.747 கோடியாகவும் ரூ.548 கோடியாகவும் இருந்த நிறுவனத்தின் வரிக்கு முந்தைய மற்றும் வரிக்குப் பிந்தைய நிகர லாபங்கள், நடப்பு நிதியாண்டின் அதே காலாண்டில் முறையே ரூ.470 கோடியாகவும் ரூ.343 கோடியாகவும் குறைந்துள்ளது.

வரிக்குப் பிந்தைய ஒருங்கிணைந்த லாபம் ரூ.557 கோடியிலிருந்து ரூ.357 கோடியாகக் குறைந்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments