இந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட் கடந்த ஜூன் காலாண்டில் இதுவரை இல்லாத அதிக எண்ணிக்கையில் வா்த்தக வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜூனுடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவன வா்த்தக வாகனங்களின் எணிக்கை 43,893-ஆக உள்ளது. இந்த எண்ணிக்கை இதுவரை இல்லாத அதிகபட்ச முதல் காலாண்டு விற்பனையாகும்.
முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனம் 41,329 வா்த்தக வாகனங்ளை விற்பனை செய்திருந்தது.
மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் நடுத்தர மற்றும் கனரக வா்த்தக வாகனங்களின் உள்நாட்டு விற்பனை 8 சதவீதம் அதிகரித்துள்ளது. அந்தக் காலாண்டில் நிறுவனத்தின் சந்தைப் பங்கு 30.7 சதவீதமாக உள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.