புதிய உச்சத்தில் பங்குச்சந்தைகள் வர்த்தகம்
தேர்தல் கருத்துக்கணிப்பு தாக்கத்தால் நிஃப்டி, சென்செக்ஸ் புள்ளிகள் உயர்ந்து வர்த்தகமாகிறது.
வாரத்தின் முதல் நாளான இன்று மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 2,000 புள்ளிகள் உயர்ந்து 75,800 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
அதேசமயம் தேசிய பங்குச்சந்தையின் நிஃப்டி 600 புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சமான 23,300 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
வர்த்தக தொடக்கத்திலேயே சென்செக்ஸ் 2000 புள்ளிகள் உயர்ந்ததால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.