கோப்புப்படம் 
வணிகம்

தங்கம் புதிய உச்சம்: ரூ.55,000-ஐ கடந்தது!

ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.55,200. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,01,000.

DIN

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.55,000-ஐ கடந்து திங்கள்கிழமை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. சனிக்கிழமை நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ.6,850-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.54,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று காலை அதிரடியாக சவரனுக்கு ரூ.400 அதிகரித்து புதிய உச்சத்தை தங்கத்தின் விலை தொட்டுள்ளது.

சென்னையில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.6,900-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.55,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கிடையே வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ.3.50 அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. முதல் முறையாக ரூ.100-ஐ கடந்துள்ளது.

ஒரு கிராம் வெள்ளி ரூ.101.00-க்கும், ஒரு கிலோ ரூ.1,01,000-க்கும் விற்பனையாகி வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடி பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து!

வைக்கத்தில் பெரியார் சிலைக்கு மரியாதை!

மின்துறை அதிகாரி வீட்டில் ரூ.300 கோடி சொத்து ஆவணங்கள், ரூ.2,18 கோடி பறிமுதல்!

காரில் இருந்து பாமக கொடியை அகற்றிய ராமதாஸ்! ஏன்?

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

SCROLL FOR NEXT