அசோக் லேலண்ட் விற்பனை 13% உயர்வு
சென்னை: ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்டின் விற்பனை கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் 13 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2023-24-ஆம் நிதியாண்டில் நிறுவனத்தின் விற்பனை 14,271-ஆகப் பதிவாகியுள்ளது. முந்தைய 2022-2023-ஆம் நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 12,974-ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நிறுவனத்தின் விற்பனை 13 சதவீதம் உயர்ந்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 9 சதவீதம் அதிகரித்து 13,446-ஆக உள்ளது. இது, 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் 12,366-ஆக இருந்தது.
2023 மார்ச்சில் 7,422-ஆக இருந்த நிறுவன நடுத்தர மற்றும் கனரக வர்த்தக வாகனங்களின் விற்பனை இந்த மார்ச்சில் 16 சதவீதம் அதிகரித்து 8,611-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.