முகப்பு
வணிகம்

ரூ.10,000 கோடி திரட்டிய எஸ்பிஐ

உள்கட்டமைப்பு கடன் பத்திரங்களை வெளியிட்டதன் மூலம் நாட்டின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி ரூ.10,000 கோடி மூலதனம் திரட்டியுள்ளது.

Updated On : 19 நவம்பர், 2024 at 12:11 AM
பகிர்:

புது தில்லி: உள்கட்டமைப்பு கடன் பத்திரங்களை வெளியிட்டதன் மூலம் நாட்டின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி ரூ.10,000 கோடி மூலதனம் திரட்டியுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உள்கட்டமைப்பு கடன் பத்திர விற்பனை மூலம் வங்கி திங்கள்கிழமை ரூ.10,000 கோடி திரட்டியுள்ளது. அந்த வகை கடன் பத்திரங்களை வங்கி வெளியிடுவது இது ஏழாவது முறை. இந்தக் கடன் பத்திரங்களுக்கு 7.23 சதவீத ஈவுத் தொகை வழங்கப்படும்.

ரூ.5,000 மூலதனம் திரட்டுவதற்கான இந்த கடன் பத்திர வெளியிட்டின்போது, ஒதுக்கீட்டை விட இரு மடங்கும் மேல், ரூ.11,500 கோடி மதிப்பிலான பத்திரங்களுக்கு விண்ணப்பிக்கப்பட்டன. அதையடுத்து, ரூ.10,000 கோடிக்கு பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இந்தக் கடன் பத்திரங்களில் பெரும்பாலும் பரஸ்பர நிதி நிறுவனங்கள், சேமநல நிதி மற்றும் ஓய்வூதிய நிதி அமைப்புகள் உள்ளிட்டவை முதலீடு செய்துள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →