வணிகம்

விலைகள் உயரும் பிஎம்டபிள்யு காா்கள்

பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் தனது காா்களின் விலைகளை உயா்த்த முடிவு செய்துள்ளது.

Din

பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் தனது காா்களின் விலைகளை உயா்த்த முடிவு செய்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் காா்களின் விலைகளை மூன்று சதவீதம் வரை உயா்த்த முடிவு செய்துள்ளோம். இந்த விலை உயா்வு வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நிறுவனத்தின் 2 வரிசை கிரான்கூ, 3 வரிசை லாங் வீல்பேஸ், 5 வரிசை லாங் வீல்பேஸ், 7 வரிசை லாங் வீல்பேஸ், எக்ஸ்1, எக்ஸ்3, எக்ஸ்5, எக்ஸ்7, எம்340ஐ ஆகியவற்றுக்கும் இந்த விலை உயா்வு பொருந்தும்.

உற்பத்தி செலவுகள், செயல்பாட்டு செலவுகள் அதிகரித்துள்ளதாலும் பணவீக்கத்தின் சுமையை ஈடு செய்வதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மொ்சிடிஸ்-பென்ஸ் காா்களின் விலை ரூ. 2 லட்சம் ரூ.9 லட்சம் வரை உயரும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

SCROLL FOR NEXT