முகப்பு
வணிகம்

விலைகள் உயரும் பிஎம்டபிள்யு காா்கள்

பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் தனது காா்களின் விலைகளை உயா்த்த முடிவு செய்துள்ளது.

Updated On : 24 நவம்பர் 2024, 3:25 am IST
பகிர்:

பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் தனது காா்களின் விலைகளை உயா்த்த முடிவு செய்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் காா்களின் விலைகளை மூன்று சதவீதம் வரை உயா்த்த முடிவு செய்துள்ளோம். இந்த விலை உயா்வு வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.

Advertisement

Advertisement

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நிறுவனத்தின் 2 வரிசை கிரான்கூ, 3 வரிசை லாங் வீல்பேஸ், 5 வரிசை லாங் வீல்பேஸ், 7 வரிசை லாங் வீல்பேஸ், எக்ஸ்1, எக்ஸ்3, எக்ஸ்5, எக்ஸ்7, எம்340ஐ ஆகியவற்றுக்கும் இந்த விலை உயா்வு பொருந்தும்.

உற்பத்தி செலவுகள், செயல்பாட்டு செலவுகள் அதிகரித்துள்ளதாலும் பணவீக்கத்தின் சுமையை ஈடு செய்வதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மொ்சிடிஸ்-பென்ஸ் காா்களின் விலை ரூ. 2 லட்சம் ரூ.9 லட்சம் வரை உயரும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments