ரிலையன்ஸ் குழுமம் 
வணிகம்

மின்சார வாகன பேட்டரி தயாரிப்பில் களமிறங்கும் ரிலையன்ஸ்!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மின்சார வாகன பேட்டரி உற்பத்தியை ஆதரிக்கும் ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் ஏலத்தை வென்றுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

DIN

பெங்களூரு: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மின்சார வாகன பேட்டரி உற்பத்தியை ஆதரிக்கும் ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் ஏலத்தை வென்றுள்ளது என்று மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், அரசு உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், மேம்பட்ட பேட்டரி செல்களின் உள்ளூர் உற்பத்தி அலகுகளை அமைக்க ஏழு நிறுவனங்கள் ஏலங்களை சமர்ப்பித்ததில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஏலத்தை வென்றுள்ளது.

ஆயில்-டு-டெலிகாம் குழுமமானது பேட்டரி தயாரிப்பாளரான அமர ராஜா எனர்ஜி, ஜே.எஸ்.டபிள்யூ எனர்ஜி உள்ளிட்ட மற்ற போட்டியாளர்களை பின்னுக்குத் தள்ளியுள்ள நிலையில், மேம்பட்ட வேதியியல் செல்களை தயாரிப்பில் களமிறங்கியுள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மின்சார வாகனங்களின் வளர்ச்சிக்கு ஊக்குவிக்கும் என தெரியவந்துள்ளது.

அதிகபட்சமாக ரூ.3,600 கோடி முதலீட்டில் வரும் இந்த திட்டமானது பேட்டரிகளின் உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமானது 10 ஜிகாவாட் மேம்பட்ட வேதியியல் பேட்டரிகளை உருவாக்க முடியும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இந்தியாவில் மொத்த கார் விற்பனையில் மின்சார கார் மாடலானது சுமார் 2 சதவிகிதமாக இருந்த நிலையில், 2030-க்குள் அதை 30 சதவிகிதமாக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டு விருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

SCROLL FOR NEXT