FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

ஐக்யூ நிறுவனத்துக்குப் போட்டியாக ரியல்மி! ஏப். 9-ல் 2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்!

ரியல்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்கள் ஏப். 9ஆம் தேதி அறிமுகமாகிறது.

Updated On : 2 ஏப்ரல் 2025, 6:44 pm IST
ரியல்மி நர்ஸோ 80 ப்ரோ - படம் | ரியல்மி
பகிர்:

ரியல்மி நிறுவனத்தின் இரு புதிய ஸ்மார்ட்போன்கள் ஏப். 9ஆம் தேதி அறிமுகமாகின்றன.

நர்ஸோ வரிசையில் ரியல்மி நர்ஸோ 80 ப்ரோ மற்றும் நர்ஸோ 80எக்ஸ் ஆகிய இரு போன்கள் இந்தியாவில் அறிமுகமாகின்றன.

இந்த இரு ஸ்மார்ட்போன்களும் ரியல்மி நர்ஸோ 70 ப்ரோ, நர்ஸோ 70எக்ஸ் ஆகிய இரு ஸ்மார்ட்போன்களின் அடுத்தக்கட்ட தயாரிப்பாக வெளியாகின்றன. இரு ஸ்மார்ட்போன்களும் 6000mAh மின்கலன் திறனுடன் வருவது உறுதியாகியுள்ளதால், ரியல்மி வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement

Advertisement

சிறப்புகள் என்னென்ன?

ரியல்மி நர்ஸோ 80 ப்ரோ, நர்ஸோ 80எக்ஸ் ஆகிய இரு ஸ்மார்ட்போன்களும் ஏப். 9ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

5ஜி பயன்பாட்டை உள்ளடக்கிய ரியல்மி நர்ஸோ 80 ப்ரோ இந்திய சந்தையில் ரூ. 20,000 -க்கு விற்பனையாகவுள்ளது. இதேபோன்று நர்ஸோ 80எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு ரூ. 13,000 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி நர்ஸோ 80 ப்ரோ ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 6400 இயங்குதளத்துடனும், நர்ஸோ 80எக்ஸ் டைமன்சிட்டி 7400 இயங்குதளத்துடனும் அறிமுகமாகிறது.

இரு ஸ்மார்ட்போன்களும் 6000mAh மின்கலன் திறன் உடையவை. ரியல்மி நர்ஸோ 80 ப்ரோ 80 வாட்ஸ் திறனுடனும், நர்ஸோ 80எக்ஸ் 45 வாட்ஸ் திறனுடனும் வருகிறது. இரு ஸ்மார்ட்போன்களும் 4500 நிட்ஸ், ஒளி அளவு வெளிச்சம் கொண்டது.

இந்த இரு ஸ்மார்ட்போன்களுமே ஏப். 11ஆம் தேதி வெளியாகும் சீனாவின் ஐக்யூ நிறுவனத்தின் ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக சந்தையில் களமிறக்கப்படுகிறது.

இதையும் படிக்க | ஐபிஎல் ரசிகர்களுக்காக... ஒரு ரூபாய்க்கு 1 ஜிபி! பிஎஸ்என்எல் புதிய அறிவிப்பு!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments