ரிசர்வ் வங்கி 
வணிகம்

மல்ஹோத்ரா கையெழுத்துடன் ரூ.10 மற்றும் ரூ.500 தாள்களை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு!

மகாத்மா காந்தி வரிசையில் ரூ.10 மற்றும் ரூ.500 தாள்கள் விரைவில் வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி இன்று தெரிவித்தது.

DIN

மும்பை: மகாத்மா காந்தி வரிசையில் ரூ.10 மற்றும் ரூ.500 தாள்கள் விரைவில் வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி இன்று தெரிவித்தது.

இந்த தாள்களின் வடிவமைப்பு மகாத்மா காந்தி வரிசையில் தற்போது உள்ள ரூ.10 மற்றும் ரூ.500 தாள்களை போலவே உள்ளதாக தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.

கடந்த காலங்களில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அனைத்து ரூ.10 மற்றும் ரூ.500 மதிப்புள்ள தாள்களும் வழக்கம்போல் செல்லும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் கடந்த மாதம், ரிசர்வ் வங்கி ஆளுநர் மல்ஹோத்ராவின் கையொப்பத்துடன் ரூ.100 மற்றும் ரூ.200 மதிப்புள்ள தாள்கள் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தது.

நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம் முடிந்த பிறகு, பதவியிலிருந்து விலகிய சக்திகாந்த தாஸுக்கு பதிலாக மல்ஹோத்ரா 2024 டிசம்பரில் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பொறுப்பேற்றார்.

இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து ரூ.85.25 ஆக முடிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்களவையில் எதிரொலித்த திருப்பரங்குன்றம் தீபம்! டி.ஆர். பாலு - எல் முருகன் இடையே வாதம்

திருப்பரங்குன்றம் குறித்து சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பகிர வேண்டாம்! - மதுரைக்கிளை

பிங்க் பந்து கிரிக்கெட்டில் வரலாறு படைத்த மார்னஸ் லபுஷேன்!

குடியரசுத் தலைவர் மாளிகையில் புதினுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு!

வார பலன்கள்: 12 ராசிக்காரர்களுக்கும்!

SCROLL FOR NEXT