முகப்பு
வணிகம்

விதிமுறைகளை மீறிய ரிலையன்ஸ் செக்யூரிட்டீஸூக்கு ரூ.7 லட்சம் அபராதம்!

ரிலையன்ஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனத்திற்கு, பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான, 'செபி' ஆனது ரூ.7 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

Updated On : 7 ஏப்ரல், 2025 at 3:50 PM
பகிர்:

புதுதில்லி: ரிலையன்ஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனத்திற்கு, பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான, 'செபி' ரூ.7 லட்சம் அபராதம் இன்று விதித்துள்ளது. இந்த அபராதத் தொகையை 45 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்று செபி உத்தரவிட்டுள்ளது.

டிசம்பர் 22, 2022 முதல் ஜனவரி 24, 2023 வரையான, பதிவு செய்யப்பட்ட பங்குத் தரகரான ரிலையன்ஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தில், பங்குத் தரகு நடவடிக்கைகளை குறித்து அந்த நிறுவனம் தொகுத்துள்ளதா என்பதைச் சரிபார்க்க, செபி ஆய்வு நடத்தியதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, ரிலையன்ஸ் செக்யூரிட்டீஸ் ஆர்பிஎஸ் (RBS) வழிகாட்டுதல்களுக்கு இணங்கவில்லை என்று ஒழுங்குமுறை ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ.85.82-ஆக முடிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.