வந்தே பாரத் ரயில் உணவில் புழு! ஐஆர்சிடிசி-க்கு ரூ. 10 லட்சம்; சேவை வழங்குநருக்கு ரூ. 60 லட்சம் அபராதம்!
வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் புழு இருந்ததாக மத்திய அரசு ரூ. 60 லட்சம் அபராதம் விதிப்பு
வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் புழு இருந்ததாக ஐஆர்சிடிசி மீது ரூ. 10 லட்சம் அபராதம் விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பாட்னாவை சேர்ந்த ரிதேஷ் குமார் என்பவர், மார்ச் 15 ஆம் தேதியில் பாட்னா - டாட்டா நகர் (21896) வந்தே பாரத் விரைவு ரயிலில் பயணித்தார். இந்த பயணத்தின்போது, அவருக்கு உணவு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரிதேஷ், அதனை விடியோவாகவும் பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து, ரயில்களில் வழங்கப்படும் உணவுகளின் தரம் குறித்து பயணிகள் விமர்சிக்கத் தொடங்கினர். இதுகுறித்து, ரயில் மேலாளரிடம் புகாரும் அளிக்கப்பட்டது.
இந்த விடியோ, சமூக ஊடகங்களில் வைரலானதையடுத்து, இந்த விவகாரம் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுவதாக ரயில்வே அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது.
அறிக்கையில், எடுக்கப்பட்ட நடவடிக்கையாக இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்துக்கு (ஐஆர்சிடிசி) ரூ. 10 லட்சமும், சேவை வழங்குநருக்கு ரூ. 50 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டு, ஒப்பந்தத்தை ரத்துசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.