பங்குச்சந்தையில் முதலீடு செய்ய மக்கள் ஆர்வம்: ஒரே மாதத்தில் 11.3 லட்சம் பேர் இணைந்தனர்!
பங்குச்சந்தையில் முதலீடு செய்ய மக்கள் ஆர்வம்!
மும்பை: பங்குச்சந்தையில் முதலீடு செய்ய மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் கடந்த பிப்ரவரியில் பங்குச்சந்தையில் புதிதாக 11.3 லட்சம் பேர் இணைந்திருப்பதாக தேசிய பங்குச்சந்தைக் குறியீடு(என். எஸ். இ) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி நிலவரப்படி, பங்குச்சந்தையில் பதிவு செய்யப்பட்டுள்ள முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 11.2 கோடியாக உயர்ந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பங்குதாரர்களாக பதிவாகியுள்ள கணக்குகளின் எண்ணிக்கை 21.9 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரியில், பங்குச்சந்தையில் பதிவு செய்யப்பட்டுள்ள முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 9 கோடியாக உயர்ந்திருந்த நிலையில், அதற்கடுத்த ஐந்தே மாதங்களில், அதாவது ஆகஸ்ட்டில் இந்த எண்ணிக்கை 10 கோடியாக உயர்ந்ததும் குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
கடந்த ஓராண்டில், பங்குச்சந்தையில் முதலீடு செய்ய மக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளதே இந்த உயர்வுக்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
மும்பை: பங்குச்சந்தையில் முதலீடு செய்ய மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் கடந்த பிப்ரவரியில் பங்குச்சந்தையில் புதிதாக 11.3 லட்சம் பேர் இணைந்திருப்பதாக தேசிய பங்குச்சந்தைக் குறியீடு(என். எஸ். இ) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி நிலவரப்படி, பங்குச்சந்தையில் பதிவு செய்யப்பட்டுள்ள முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 11.2 கோடியாக உயர்ந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பங்குதாரர்களாக பதிவாகியுள்ள கணக்குகளின் எண்ணிக்கை 21.9 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரியில், பங்குச்சந்தையில் பதிவு செய்யப்பட்டுள்ள முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 9 கோடியாக உயர்ந்திருந்த நிலையில், அதற்கடுத்த ஐந்தே மாதங்களில், அதாவது ஆகஸ்ட்டில் இந்த எண்ணிக்கை 10 கோடியாக உயர்ந்ததும் குறிப்பிடத்தக்கது.
கடந்த ஓராண்டில், பங்குச்சந்தையில் முதலீடு செய்ய மக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளதே இந்த உயர்வுக்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.