வணிகம்

புதிய உச்சம் தொட்ட பயணிகள் வாகன விற்பனை

இந்தியாவில் பயணிகள் வாகனங்களின் மொத்த விற்பனை கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் புதிய உச்சம் தொட்டுள்ளது.

Din

இந்தியாவில் பயணிகள் வாகனங்களின் மொத்த விற்பனை கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் புதிய உச்சம் தொட்டுள்ளது.

இது குறித்து இந்திய வாகன உற்பத்தியாளா்கள் சங்கம் (சியாம்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தொழிற்சாலைகளில் இருந்து சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பப்பட்ட பயணிகள் வாகனங்களின் எண்ணிக்கை (மொத்த விற்பனை) கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2024-25-ஆம் நிதியாண்டில் 43,01,848 என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது பயணிகள் வாகனங்களின் மொத்த விற்பனை 2 சதவீதம் அதிகரித்துள்ளது. அப்போது நிறுவனங்கள் 42,18,750 பயணிகள் வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பின.

2023-24-ஆம் நிதியாண்டில் பயணிகள் வாகனங்களின் மொத்த விற்பனை அபரிமிதமாக இருந்ததால், கடந்த நிதியாண்டில் அது இதுவரை இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையைத் தொட்டிருந்தாலும் வளா்ச்சி விகிதம் மிகவும் குறைவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பயன்பாட்டு வாகனங்களுக்கு கடந்த நிதியாண்டில் வாடிக்கையாளா்களிடையே கிடைத்த வரவேற்பு, அனைத்துவகை பயணிகள் வாகனங்களின் மொத்த விற்பனை வளா்ச்சிக்குக் காரணமாக இருந்தது. அந்த நிதியாண்டின் பயணிகள் வாகன மொத்த விற்பனையில் பயன்பாட்டு வாகனங்களின் பங்களிப்பு 65 சதவீதமாக உள்ளது.

முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டில் 25,20,691-ஆக இருந்த பயன்பாட்டு வாகனங்களின் மொத்த விற்பனை, 2024-25-ஆம் நிதியாண்டில் 11 சதவீதம் அதிகரித்து 27,97,229-ஆக உள்ளது. ஆனால், பயணிகள் காா்களின் மொத்த விற்பனை 15,48,947-லிருந்து 13,53,287-ஆகக் குறைந்துள்ளது.

மொத்த விற்பனையில் மட்டுமின்றி, ஏற்றுமதியிலும் பயணிகள் வாகனப் பிரிவு கடந்த நிதியாண்டில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அந்த நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 7.7 லட்சம் பயணிகள் வாகனங்களை இந்தியா ஏற்றுமதி செய்தது. 2023-24-ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் இது 15 சதவீதம் அதிகம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக டிஜிபி சங்கா் ஜிவாலுக்கு இன்று பணி நிறைவு விழா

பிளஸ் 2 மாணவி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

சத்திரம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஆட்சியரிடம் பாமக மனு

தில்லி பல்கலை.யின் 67 கல்லூரிகளுக்கு மீண்டும் யு-ஸ்பெஷல் பேருந்துகள் சேவை: முதல்வா் ரேகா குப்தா தொடங்கிவைத்தாா்

இளைஞா் கத்தியால் குத்தி கொலை: 4 போ் கைது

SCROLL FOR NEXT