ஆகஸ்ட் 22ல் தொடங்கும் கிளாசிக் எலக்ட்ரோட்ஸ் ஐபிஓ!
வெல்டிங் எலக்ட்ரோட்ஸ் மற்றும் எம்ஐஜி கம்பிகள் உற்பத்தியாளர் கிளாசிக் எலக்ட்ரோட்ஸ், அதன் ஆரம்ப பொதுப் பங்கு வெளியீட்டிற்கு, ஒரு பங்கிற்கு ரூ.82-87 என நிர்ணயித்து அறிவித்துள்ளது.
மும்பை: வெல்டிங் எலக்ட்ரோட்ஸ் மற்றும் எம்ஐஜி கம்பிகள் உற்பத்தியாளரான கிளாசிக் எலக்ட்ரோட்ஸ் (இந்தியா) லிமிடெட், அதன் ஆரம்ப பொதுப் பங்கு வெளியீட்டிற்கு, பங்கிற்கு ஒன்றுக்கு ரூ.82 முதல் ரூ.87 என நிர்ணயித்து அறிவித்தது. இதன் மூலம் நிறுவனம் மொத்தம் ரூ.41.50 கோடி திரட்ட இலக்கு வைத்துள்ளது.
இந்த ஐபிஓ முற்றிலும் 47.71 லட்சம் ஈக்விட்டி பங்குகளின் புதிய வெளியீடாகும். வரும் ஆகஸ்ட் 22 மூதல் சந்தாவிற்காக திறந்து, மீண்டும் ஆகஸ்ட் 26, 2025 அன்று முடிவடையும் என்று நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. வெளியீட்டிற்குப் பிறகு, பங்குகள் நிஃப்டி-யில் பட்டியலிடப்படும்.
ஐபிஓ வருமானத்தை பயன்படுத்தி ஆலை மற்றும் இயந்திரங்களை வாங்குவதற்கான மூலதன செலவினங்களுக்கு நிதியளிக்கவும், சில நிலுவையில் உள்ள கடன்களை திருப்பிச் செலுத்தவும், பணி மூலதனத் தேவைகளுக்கு நிதியளிக்கவும் முன்மொழிந்துள்ளது நிறுவனம். அதே வேளையில் மேற்கு வங்கம் மற்றும் ஹரியானாவில் இரண்டு உற்பத்தி அலகுகளைக் கொண்டுள்ளது.
Advertisement
Advertisement
பிப்ரவரி 28, 2025 வரையிலான 11 மாதங்கள் முடிய கிளாசிக் எலக்ட்ரோடுகள் ரூ.187.60 கோடி வருவாயைப் பதிவு செய்துள்ளது. பிப்ரவரி 2025 வரையிலான 11 மாத காலத்தில் வரிக்குப் பிந்தைய லாபமாக ரூ.9.51 கோடியாக உள்ளது என்று தெரிவித்துள்ளது.
நிதியாண்டு 2024ல் ரூ.194.40 கோடி வருவாயையும், வரிக்குப் பிந்தைய லாபமாக ரூ.12.29 கோடியையும் ஈட்டியுள்ளது.
இதையும் படிக்க: ஆம்பர் எண்டர்பிரைசஸ் பங்குகள் 8 சதவிகிதம் உயர்வு!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.