தமிழ்நாட்டில் நோக்கியா நிறுவனம் முதலீடு X | TRB Rajaa
தமிழ்நாடு

சென்னையில் நோக்கியா ரூ. 270 கோடி முதலீடு!

சென்னையில் முதற்கட்டமாக நோக்கியா நிறுவனம் ரூ. 270 கோடி முதலீடு: வர்த்தகத் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னையில் முதற்கட்டமாக நோக்கியா நிறுவனம் ரூ. 270 கோடி முதலீடு செய்யவிருப்பதாக வர்த்தகத் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா கூறியுள்ளார்.

இதுகுறித்த அறிவிக்கையில் டிஆர்பி ராஜா கூறியிருப்பதாவது, நிலையான நெட்வொர்க்குகளுக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதிக்காக தமிழ்நாட்டை நோக்கியா அணுகியுள்ளது. இதன் மூலம், தொலைத் தொடர்பில் மாநிலத்தின் தலைமை வலுப்படுகிறது.

சென்னையில் சிப்காட் சிறுசேரியில் நோக்கியா தனது புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தைத் திறந்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டுக்கு 200 வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

நோக்கியா, மாநிலத்தின் மிக முக்கியமான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முதலீட்டாளர்களில் ஒருவர். இந்த நிறுவனம், ஏற்கெனவே 1997-ல் தமிழ்நாட்டில் 1,000 பொறியாளர்களை பணியமர்த்தியுள்ளது.

முதல்வர் ஸ்டாலினின் அமெரிக்க சுற்றுப்பயணத்தின்போது, கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து இந்த விரிவாக்கம் தொடங்குகிறது.

திட்டத்தின் முதல் கட்டம் ரூ. 270 கோடி (முதலில் ரூ. 220 கோடி என்று வாக்குறுதியளிக்கப்பட்டது) முதலீட்டைக் கொண்டு வருகிறது. இரண்டாவது கட்டத்தில் சுமார் ரூ. 300 கோடி என்று கூறப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

Nokia launches R&D facility for fixed network in Chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகக் கோப்பைத் தொடரிலிருந்து இலங்கை வேகப் பந்துவீச்சாளர் விலகல்; மாற்று வீரர் அறிவிப்பு!

சூடானில் வாகனங்கள் மீது ட்ரோன் தாக்குதல்கள்: 8 குழந்தைகள் உள்பட 24 பேர் பலி!

இந்தியாவை உலகுடன் இணைக்கும் தமிழ் மொழி: மலேசியாவில் பிரதமர் மோடி

மாரியம்மன் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா - புகைப்படங்கள்

ஹெட்மேயர் அரைசதம் விளாசல்; ஸ்காட்லாந்துக்கு 183 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT