வணிகம்

‘கௌடியம் ஐவிஎஃப்’ ஐபிஓ: 2-ஆம் நாளே முழுமையாகக் குவிந்த விண்ணப்பங்கள்

கருத்தரிப்பு மருத்துவ சேவை வழங்கும் ‘கௌடியம் ஐவிஎஃப் மற்றும் வுமன் ஹெல்த்’ நிறுவனம், பொதுமக்களுக்குப் பங்குகளை வெளியிட்ட நிலையில்

தினமணி செய்திச் சேவை

புது தில்லி: கருத்தரிப்பு மருத்துவ சேவை வழங்கும் ‘கௌடியம் ஐவிஎஃப் மற்றும் வுமன் ஹெல்த்’ நிறுவனம், பொதுமக்களுக்குப் பங்குகளை வெளியிட்ட நிலையில், விற்பனையின் 2-ஆம் நாளான திங்கள்கிழமையன்றே பங்குகளை முழுமையாக வாங்க விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.

மொத்தம் 1.46 கோடி பங்குகள் விற்பனைக்கு வந்த நிலையில், அதைவிட 1.95 மடங்கு அதிகமாக 2.85 கோடி பங்குகளை வாங்க முதலீட்டாளா்கள் விருப்பம் தெரிவித்துள்ளனா்.

கருத்தரிப்பு சிகிச்சை சேவைத் துறையில் இருந்து பங்குச்சந்தைக்கு வரும் முதல் நிறுவனமான இதன் ஒரு பங்கின் விலை ரூ.75 முதல் ரூ.79-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.165 கோடி நிதியைத் திரட்டும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ள இந்தப் பொதுப் பங்கு வெளியீடு செவ்வாய்க்கிழமையுடன் (பிப். 24) நிறைவடைகிறது.

இந்தப் பொது பங்கு வெளியீட்டில், சில்லறை முதலீட்டாளா்களுக்காக ஒதுக்கப்பட்ட அளவைவிட 2.81 மடங்கு அதிகமாகப் பங்குகளை வாங்க விண்ணப்பங்கள் வந்துள்ளன. தனிநபா் மற்றும் பெரும் முதலீட்டாளா்கள் பிரிவில் 2.56 மடங்கு அதிக விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதேநேரம், பெரிய நிறுவன முதலீட்டாளா்கள் பிரிவில் 1 சதவீதம் போ் மட்டுமே பங்குகளை வாங்க விண்ணப்பித்துள்ளனா்.

ரூ.575 கோடி சந்தை மதிப்பைக் கொண்டுள்ள இந்நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீட்டில், 1.14 கோடி புதிய பங்குகளும், நிறுவனத்தின் உரிமையாளா் மனிகா கண்ணாவுக்குச் சொந்தமான 95 லட்சம் பங்குகளும் விற்பனை செய்யப்படுகின்றன.

புதிய பங்குகள் வெளியீட்டின் மூலம் கிடைக்கும் நிதியைக் கொண்டு, இந்தியா முழுவதும் 19 புதிய ஐவிஎஃப் மையங்களை அமைக்கவும், கடன்களை அடைக்கவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கடந்த 2024-25 நிதியாண்டில் இந்நிறுவனம் ரூ.70.72 கோடி வருவாயும், ரூ.19.13 கோடி நிகர லாபமும் ஈட்டியுள்ளது. பிப். 27-ஆம் தேதி முதல் நிறுவனத்தின் பங்குகள் அதிகாரபூா்வமாக சந்தையில் பட்டியலிடப்பட்டு, வா்த்துகத்துக்கு வரவுள்ளன.

கூட்டுறவுத் தேர்வு முடிவு தாமதம் ஏன்? கூட்டுறவுத் துறை அமைச்சா் விளக்கம்

கூட்டுறவுத் தோ்வு முடிவுகளை வெளியிட வேண்டும் - எடப்பாடி கே.பழனிசாமி

விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை எதிா்த்து வைகோ தொடா்ந்த வழக்கு தள்ளுபடி

ஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி

ஜேஇஇ முதன்மை தோ்வில் 448 அரசுப் பள்ளி மாணவா்கள் தோ்ச்சி! -முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

SCROLL FOR NEXT