முகப்பு
வணிகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 54 காசுகள் உயர்ந்து ரூ.89.66 ஆக நிறைவு!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 54 காசுகள் உயர்ந்து ரூ.89.66 ஆக நிலைபெற்றது.

Updated On : 19 டிசம்பர், 2025 at 2:50 PM
- PTI Graphics
பகிர்:

பெருநிறுவன நிறுவனங்களிடமிருந்து டாலர் வரத்து மற்றும் கச்சா எண்ணெய் விலை சரிவு உள்ளிட்ட காரணமாக, இன்றைய வர்த்தகத்தில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 54 காசுகள் உயர்ந்து ரூ.89.66 ஆக நிலைபெற்றது.

உள்நாட்டுப் பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட நேர்மறையான போக்கும் மற்றும் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு ஒன்றுக்கு 59 டாலருக்கு அருகில் இருந்ததால், ரூபாயின் மதிப்பு அதன் குறைந்த மட்டத்திலும் வர்த்தகர்கள் ஆதரவளித்ததாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

சமீபத்திய வாரங்களில் ரூபாய் தொடர்ச்சியாகச் சரிந்து, அதன் சாதனை அளவிலான குறைந்த மதிப்பை எட்டியதையடுத்து, இந்திய ரிசர்வ் வங்கியின் தலையீட்டால் மதிப்பு உயர்ந்தது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணிச் சந்தையில், டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.90.19 என்ற அளவில் வர்த்தகமாகி, பிறகு உயர்ந்து, இன்றைய நாளின் உச்சபட்சமாக ரூ.89.25 என்ற நிலையை எட்டியது. இது அதன் முந்தைய நாளின் முடிவோடு ஒப்பிடுகையில் 95 காசுகள் உயர்வாகும். வர்த்தக முடிவில், ரூபாய் முந்தைய நாள் முடிவிலிருந்து 54 காசுகள் உயர்ந்து ரூ.89.66 என்ற அளவில் நிலைபெற்றது.

நேற்று (வியாழக்கிழமை) இந்திய ரூபாய் மதிப்பு 18 காசுகள் உயர்ந்து அமெரிக்க டாலருக்கு நிகராக ரூ.90.20 என்ற அளவில் வர்த்தகம் நிறைவடைந்தது.

இதையும் படிக்க: பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

summary

The rupee appreciated 54 paise to close at 89.66 against the US dollar on Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.