சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் நிறைவு!
சென்செக்ஸ் 20.46 புள்ளிகள் சரிந்து 84,675.08 புள்ளிகளாகவும், நிஃப்டி 3.25 புள்ளிகள் சரிந்து 25,938.85 புள்ளிகளாகவும் இருந்தது.
மும்பை: இன்றைய வர்த்தகத்தில், நிஃப்டி ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ் (காலாவதி நாள்) மற்றும் ஃபெட் டிசம்பர் மாத அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்னதாக முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் இருந்ததால், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் தொடர்ந்து 5-வது நாளாக சரிவுடன் முடிவடைந்தன.
வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 20.46 புள்ளிகள் சரிந்து 84,675.08 புள்ளிகளாகவும், நிஃப்டி 3.25 புள்ளிகள் சரிந்து 25,938.85 புள்ளிகளாகவும் இருந்தது. பிஎஸ்இ-யில், மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் சரிவுடன் முடிவடைந்தன.
சென்செக்ஸில் எடர்னல், இன்ஃபோசிஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், அல்ட்ராடெக் சிமென்ட், பஜாஜ் ஃபைனான்ஸ், எச்சிஎல் டெக் மற்றும் டைட்டன் உள்ளிட்ட பங்குகள் சரிந்த நிலையில் டாடா ஸ்டீல், மஹிந்திரா & மஹிந்திரா, பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவை உயர்ந்து முடிந்தன.
Advertisement
Advertisement
நிஃப்டி-யில் ஸ்ரீராம் ஃபைனான்ஸ், டாடா ஸ்டீல், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், எம்&எம், பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் அதே மேக்ஸ் ஹெல்த்கேர், எடர்னல், அப்பல்லோ மருத்துவமனைகள், இன்டர்குளோப் ஏவியேஷன், டாடா நுகர்வோர் ஆகிய பங்குகள் சரிந்து முடிவடைந்தன.
துறை ரீதியாக, ஆட்டோ குறியீடு 1% உயர்ந்ததும், உலோக குறியீடு 2% அதிகரித்ததும், பொதுத்துறை வங்கி கிட்டத்தட்ட 2% உயர்ந்தன. ஐடி, ரியல் எஸ்டேட், நுகர்வோர் சாதனங்கள், சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பங்குகள் 0.5 முதல் 1% வரை சரிந்தன.
ஊடகத் துறைகளைத் தவிர, மற்ற அனைத்து குறியீடுகளும் ஆட்டோ, ஐடி, பார்மா, ரியல் எஸ்டேட், மின்சாரம் ஆகியவை 0.4 முதல் 0.9% வரை சரிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் 3,244 பங்குகள் வர்த்தகமான நிலையில் 1,409 பங்குகள் உயர்ந்தும் 1,723 பங்குகள் சரிந்தும் 112 பங்குகள் மாற்றமின்றி முடிவடைந்தன.
பங்கு சார்ந்த நடவடிக்கையில், கான்கார்ட் மருந்துகளின் பங்குகள் ரூ.14.71 கோடி மதிப்பிலான ஆர்டர் பெற்றதையடுத்து அதன் பங்குகள் 3.4% அதிகரித்தன. எம்.யூ.எஃப்.ஜி. ஒப்பந்தத்திற்குப் பிறகு ஸ்ரீராம் பைனான்ஸ் பங்குகள் 2% அதிகரித்தன.
சவுதி அரேபியாவில் புதிய எஃப்.எம்.சி.ஜி. உற்பத்தி வசதியை அமைத்ததால், க்யூபிட் பங்குகள் 4% அதிகரித்தன. மகாராஷ்டிர கிராமின் வங்கியின் கிராமப்புற வங்கி வலையமைப்பை அளவிட நீண்டகால எஸ்.எல்.ஏ-யில் கையெழுத்திட்டதன் மூலம் பார்ட்ரானிக்ஸ் இந்தியா பங்குகளின் விலை 1% உயர்ந்தன.
போனஸ் வெளியீட்டிற்கான பங்குதாரர்களின் ஒப்புதலால், ஓரியண்ட் டெக்னாலஜிஸ் பங்குகள் 20%க்கும் அதிகமாக உயர்ந்தன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் ஆர்டரை கையகப்படுத்திய பிறகு திரிசக்தி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் 3.5% உயர்ந்தன. ஈஎஸ்பிஎன் பிராப்பர்ட்டி பில்டர்ஸிடமிருந்து ரூ.364 கோடி மதிப்புள்ள ஆர்டரை பெற்றதால் பிஎல் காஷ்யப் பங்குகள் சுமார் 1.5% அதிகரித்தன.
ஜிண்டால் ஸ்டெயின்லெஸ் லிமிடெட், நால்கோ, ஏஐஏ இன்ஜினியரிங், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், யுபிஎல், அசோக் லேலண்ட், கனரா வங்கி, சாய்ஸ் இன்டர்நேஷனல், லாரஸ் லேப்ஸ், மாருதி சுசுகி, சிட்டி யூனியன் வங்கி, பிடிசி இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பங்குகள் இன்று அதன் 52 வார உச்சத்தை எட்டியது. மறுபுறம் ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ், பாலி மெடிகேர், டாடா கெமிக்கல்ஸ், பிஏஎஸ்எஃப், பிசிபிஎல் கெமிக்கல், டிக்சன் டெக்னாலஜிஸ், வேதாந்த் ஃபேஷன்ஸ், கோல்கேட் பாமோலிவ், கோத்ரேஜ் அக்ரோவெட், ஏசிசி உள்ளிட்ட 200 பங்குகள் அதன் 52 வார குறைந்தபட்ச விலையை தொட்டது.
சர்வதேச அளவில் பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய்க்கு ஒன்றுக்கு 0.47% உயர்ந்து 62.23 அமெரிக்க டாலராக உள்ளது.
புதிய பங்கு வெளியீடு பட்டியல்
ஐபிஓ வெளியீட்டிற்கு பிறகு, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிலையில் குஜராத் கிட்னி மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி நிறுவனத்தின் பங்குகள் 9% சரிவுடன் நிறைவு.
Stock markets ended marginally lower on Tuesday amid thin year-end trading as persistent foreign fund outflows and a muted trend in global equities weighed on investors sentiment.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.