ஆர்பிஐ - கோப்புப்படம் File photo
வணிகம்

கடனை முன்கூட்டியே செலுத்தினால் கட்டணம் வசூலிக்கக் கூடாது: ஆர்பிஐ

முன்கூட்டியே கடனை திருப்பிச் செலுத்தினால் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று ஆர்பிஐ புதிய விதிமுறை வெளியிட்டுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

வங்கி அல்லது நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெறுவோர், அதனை முன்கூட்டியே செலுத்தும்போது, கூடுதல் கட்டணம் வசூலிக்கத் தடை விதிக்கும் புதிய விதிமுறையை ஆர்பிஐ உருவாக்கியிருக்கிறது.

தனிநபர்கள் அல்லது தொழில் நிறுவனங்கள், நிதி நிறுவனங்களிடமிருந்து பெரும் கடனில் அசல் தொகையை முன்கூட்டியே திருப்பி செலுத்தும்போது, கட்டணம் வசூலிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டிருந்த இந்த விதிமுறையானது, 2026ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது.

ஃபுளோட்டிங் ரேட் எனப்படும் மாறத் தக்க வட்டி விகிதத்தில் பெறப்படும் கடனுக்கு மட்டுமே இந்த விதிமுறை பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தனிநபர்கள், வணிக நோக்கத்துகக்க அல்லாமல் பெறும் கடன்களுக்கும், வணிக நோக்கத்துடன் தனிநபர் அல்லது சிறு தொழில் நிறவனங்கள் பெறும் கடன்களை, முன்கூட்டியே அசல் தொகையை திருப்பிச் செலுத்தும்போது, அதற்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது.

இந்த புதிய விதிமுறையானது, வரும் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் வழங்கப்படும் கடன்களுக்கும், ஏற்கனவே வாங்கி புதுப்பிக்கப்படும் கடன்களுக்கும் பொருந்தும்.

கடன் வழங்கும் பொதுத் துறை வங்கிகள், வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், நிதி நிறுவனங்கள், வங்கிப் பணிகளை மேற்கொள்ளாத நிதி நிறுவனங்கள் என அனைத்துக்கும் இந்த விதிமுறை பொருந்தும்.

கடனை முழுமையாக திருப்பிச் செலுத்தினாலும், ஒரு பகுதியாக அசல் தொகையை திருப்பிச் செலுத்தினாலும் எந்தக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது.

வங்கி அல்லது நிதி நிறுவனத்திடம் திருப்பிச் செலுத்தும் தொகைக்கு, வாடிக்கையாளர் எந்த நிதி ஆதாரத்தையும் காட்டத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RBI has issued a new rule that no fee should be charged for early repayment of loans.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாயக்காரி... கீர்த்தி சுரேஷ்!

நிர்மலா சீதாராமனுடன் தங்கம் தென்னரசு,கனிமொழி சந்திப்பு! செய்திகள்: சில வரிகளில் | 19.8.25 | Dmk | BJP

மும்பையில் மோனோரயில் விபத்து: பயணிகளை மீட்கும் பணிகள் தீவிரம்!

மக்களின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் புறக்கணிப்பு..! ரசிகர்கள் வருத்தம்!

முதல் நாளில் சந்தாவை முழுவதுமாக பெற்ற ஜெம் அரோமாடிக்ஸ்!

SCROLL FOR NEXT