கோப்புப் படம் 
வணிகம்

பங்குச் சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 721 புள்ளிகளுடனும், நிஃப்டி 225 புள்ளிகளுடன் நிறைவு!

சென்செக்ஸ் 721.08 புள்ளிகள் சரிந்து 81,463.09 புள்ளிகளுடனும் நிஃப்டி 225.10 புள்ளிகள் சரிந்து 24,837 புள்ளிகளாக நிலைபெற்றது.

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பை: வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்றைய வர்த்தகத்தில், பங்குச் சந்தைகள் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக சரிந்து முடிந்தன. நிதி, ஐடி மற்றும் எண்ணெய் & எரிவாயு ஆகிய பங்குகளில் ஏற்பட்ட தொடர் விற்பனை காரணமாக சென்செக்ஸ் 721 புள்ளிகள் சரிந்தன.

இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 786.48 புள்ளிகள் சரிந்து 81,397.69 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக முடிவில் 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 721.08 புள்ளிகள் சரிந்து ஒரு மாதத்திற்கும் மேலான குறைந்தபட்சம அளவான 81,463.09 புள்ளிகளுடனும் 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 225.10 புள்ளிகள் சரிந்து 24,837 புள்ளிகளாக நிலைபெற்றது.

பங்குச் சந்தையில் இரண்டு நாட்களில் ஏற்பட்ட கடுமையான சரிவைத் தொடர்ந்து முதலீட்டாளர்களின் ரூ.8.67 லட்சம் கோடி அளவுக்குக் இழப்பைச் சந்தித்துள்ளனர்.

ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் ஏற்பட்ட பலவீனமான போக்கு முதலீட்டாளர்களின் மனநிலையைப் வெகுவாக பாதித்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து நிறுவனங்களின் முடிவுகள் மந்தமாக இருந்ததும், மந்தமான உலகளாவிய சந்தை ஆகியவற்றால் உள்ளூர் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் பங்குகளை தொடர்ந்து விற்பனை செய்தனர்.

சென்செக்ஸில் பஜாஜ் ஃபைனான்ஸ் அதன் ஜூன் காலாண்டு வருவாய் அறிவிப்பிற்குப் பிறகு 4.73 சதவிகிதம் சரிந்தது. பவர் கிரிட், இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, பஜாஜ் ஃபின்சர்வ், டிரென்ட், டாடா மோட்டார்ஸ், என்டிபிசி மற்றும் அதானி போர்ட்ஸ் ஆகியவை சரிவுடன் முடிந்த நிலையில் சன் பார்மா மற்றும் பாரதி ஏர்டெல் பங்குகள் உயர்ந்து முடிவடைந்தன.

பயன்பாட்டுத் துறை பங்குகள் 2.37 சதவிகிதமும், மின்சார பங்குகள் 2.36 சதவிகிதமும், எண்ணெய் மற்றும் எரிவாயு பங்குகள் 2.11 சதவிகிதமும், தொழில்துறை 1.88 சதவிகிதமும், மூலதனப் பொருட்கள் 1.83 சதவிகிதமும், ஐடி 1.65 சதவிகிதம் மற்றும் உலோக பங்குகள் 1.64 சதவிகிதம் சரிந்தன.

பிஎஸ்இ-யில் 2,892 பங்குகள் சரிந்த நிலையில் 1,117 பங்குகள் உயர்ந்தும் 145 பங்குகள் மாறாமல் முடிவடைந்தன.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (வியாழக்கிழமை) ரூ.2,133.69 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தனர். இருப்பினும் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.2,617.14 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

ஆசிய சந்தைகளில் ஜப்பான் நிக்கேய் 225 குறியீடு, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் ஆகியவை சரிந்த வர்த்தகமான நிலையில் தென் கொரியாவின் கோஸ்பி உயர்ந்து முடிந்தன. ஐரோப்பிய சந்தைகள் சரிவுடன் வர்த்தகமானது. நேற்று (வியாழக்கிழமை) அமெரிக்க சந்தைகள் கலவையான குறிப்பில் முடிவடைந்தன.

இந்தியா - இங்கிலாந்து இடையே ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இது அடுத்த ஆண்டு தொடங்கி, இந்திய ஏற்றுமதிகளில் 99 சதவிகிதம் இங்கிலாந்தில் வரி இல்லாமல் நுழையும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் சந்தைப்படுத்துதல் மேம்படும் என்றும், இருதரப்பு வர்த்தகம் ஆண்டுதோறும் பல பில்லியன் டாலர்கள் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கார்கள் மற்றும் விஸ்கி ஆகிய பிரிட்டிஷ் தயாரிப்புகளுக்கான வரிகளை இந்தியா குறைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்க வரிகள் மீதான தடை முடிவுக்கு வருவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக வரும் இந்த ஒப்பந்தம், 2030ஆம் ஆண்டுக்குள் உலகின் ஐந்தாவது மற்றும் ஆறாவது பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையேயான 56 பில்லியன் அமெரிக்க டாலர் வர்த்தகத்தை இரட்டிப்பாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 0.32 சதவிகிதம் உயர்ந்து 69.40 அமெரிக்க டாலர்களாக உள்ளது.

இதையும் படிக்க: இன்ஃபோசிஸ் நிகர லாபம் 9% உயா்வு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி அரசு மருத்துவமனை ஊழியா்களின் பிரச்னைகளை களைய அமைச்சா் உறுதி

1,000 அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கான பதிவு இன்று தொடக்கம்: டிடிஏ தகவல்

பெற்றோரிடம் சொல்லாமல் வெளியேறிய இரு சிறுமிகள்- மீட்டு ஒப்படைத்தது தில்லி காவல்துறை

கிரேட்டா் நோய்டாவில் தனியாா் விடுதியில் துப்பாக்கிச்சூடு: எம்பிஏ மாணவா் உயிரிழப்பு; மற்றொருவா் கவலைக்கிடம்

தில்லி கண்டோன்மென்ட் திட்டத்தில் வெட்டுவதிலிருந்து தப்பிய 1,473 மரங்கள்

SCROLL FOR NEXT