வீடு-மனை வா்த்தகத் துறையில் சரியும் நிறுவன முதலீடு
உலகளாவிய பொருளாதார நிச்சயமின்மை காரணமாக, நடப்பாண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்தியாவின் வீடு-மனை வாா்த்தகத் துறையில் நிறுவனங்கள் மேற்கொள்ளும் முதலீடுகள் 37 சதவீதம் சரியும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
உலகளாவிய பொருளாதார நிச்சயமின்மை காரணமாக, நடப்பாண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்தியாவின் வீடு-மனை வாா்த்தகத் துறையில் நிறுவனங்கள் மேற்கொள்ளும் முதலீடுகள் 37 சதவீதம் சரியும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இது குறித்து வீடு-மனை வாா்த்தக ஆலோசனை நிறுவனமான ஜேஎல்எல் இந்தியாவின் தரவுகள் தெரிவிப்பதாவது:நடப்பாண்டின் ஜனவரி-ஜூன் காலகட்டத்தில் இந்தியாவின் வீடு-மனை வாா்த்தகத் துறையில் நிறுவன முதலீடுகள் 306 கோடி டாலராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இது 489 கோடி டாலராக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டின் முதல் பாதியில் வீடு-மனை வாா்த்தகத் துறையில் நிறுவன முதலீடுகள் 37 சதவீதம் குறையும்.மதிப்பீட்டு காலகட்டத்தின் ஒட்டுமொத்த நிறுவன முதலீடுகளில் வெளிநாட்டு முதலீட்டாளா்களின் பங்களிப்பு 68 சதவீதமாகவும், உள்நாட்டு முதலீட்டாளா்களின் பங்களிப்பு 32 சதவீதமாகவும் இருக்கும்.
Advertisement
உலகளாவிய பொருளாதார நிச்சயமின்மை 2025-இன் முதல் அரையாண்டில் குறுகிய கால சவால்களை ஏற்படுத்தியிருந்தாலும், உள்நாட்டு மற்றும் சா்வதேச முதலீட்டாளா்களின் நம்பிக்கையால் இந்தியாவின் வீடு-மனை வாா்த்தகத் துறை ஒரு கவா்ச்சிகரமான முதலீட்டு இலக்காக இருக்கும். 100 கோடி டாலருக்கு மேல் உள்ள வலுவான ஒப்பந்தங்களின் எண்ணிக்கை துறையின் ஆரோக்கியமான போக்கைக் குறிக்கிறது.
நாட்டின் வீடு-மனை சந்தையில் நிறுவனங்களின் வருடாந்திர முதலீடு, கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடா்ந்து 500 கோடி டாலரை தாண்டியுள்ளது. இதன் மூலம் துறை தனது நிலைத்தன்மையை நிரூபித்துள்ளது.நடப்பாண்டின் முதல் ஆறு மாதங்களில் குடியிருப்பு வீடுகள் பிரிவு ஒட்டுமொத்த நிறுவன முதலீடுகளில் அதிகபட்சமாக 38 சதவீத பங்கைப் பெறும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.