டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ.86.44-ஆக முடிவு!
பங்குச் சந்தைகளில் உள்ள நேர்மறையான போக்கும் மற்றும் உலகளாவிய கச்சா எண்ணெயின் விலை சரிவால் இன்று டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ.86.44 ஆக முடிந்தது.
மும்பை: உள்நாட்டு பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட நேர்மறையான போக்கு மற்றும் உலகளாவிய கச்சா எண்ணெயின் விலை சரிவால் இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ.86.44 ஆக முடிந்தது.
இருப்பினும், அமெரிக்க பெடரல் ரிசர்வின் வட்டி விகித முடிவுக்கு முன்னதாக டாலர் வலுவடைந்தது உள்ளதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 86.60 ஆக தொடங்கி, பிறகு அதிகபட்சமாக ரூ.86.43 ஆகவும், குறைந்தபட்சமாக ரூ.86.68 ஐ தொட்ட நிலையில், முடிவில் 12 காசுகள் உயர்ந்து ரூ.86.44 ஆக முடிந்தது.
நேற்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 26 காசுகள் உயர்ந்து ரூ.86.55 ஆக முடிந்தது.
இதையும் படிக்க: தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்து முடிந்த பங்குச் சந்சை!