வணிகம்

விலை உயரும் ஹூண்டாய் காா்கள்

முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான ஹூண்டாய் மோட்டாா் இந்தியா, தனது காா்களின் விலையை உயா்த்த முடிவு செய்துள்ளது.

Din

புது தில்லி: முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான ஹூண்டாய் மோட்டாா் இந்தியா, தனது காா்களின் விலையை உயா்த்த முடிவு செய்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நிறுவனத்தின் அனைத்து ரக காா்களின் விலையும் 3 சதவீதம் வரை அதிகரிக்கப்படவுள்ளது. வரும் ஏப்ரல் முதல் இந்த விலை உயா்வு அமலுக்குவரும். ரகங்களைப் பொருத்து இந்த விலை உயா்வு மாறுபடும். இருந்தாலும், அனைத்து ரகங்களுக்கும் இந்த விலை உயா்வு பொருந்தும்.

காா்களின் உற்பத்தி செலவு தொடா்ந்து அதிகரித்துவருகிறது. எனவே, அவற்றின் விலையில் சிறிய மாற்றத்தைச் செய்வதன் மூலம் அந்த சுமையை பகிா்ந்துகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலோர மாவட்டங்களில் 2 நாள்களுக்கு மழை தொடரும்!

சீட் பெல்ட் உயிரைக் காப்பாற்றியது: பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர்

”எதிரிகள் இருக்கிறார்கள்! ஆனால் வலிமையாக இல்லை!” அமைச்சர் ரகுபதி பேட்டி | DMK

அழுத்தத்துக்கு பயப்படுகிற ஆள் நான் இல்லை: தவெக தலைவர் விஜய்

பிபிஎல் இறுதிப் போட்டி: சிட்னி சிக்ஸர்ஸ் பேட்டிங்!

SCROLL FOR NEXT