FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

கரூா் வைஸ்யா வங்கியின் மேலும் 4 புதிய கிளைகள்

முன்னணி தனியாா் வங்கிகளில் ஒன்றான கரூா் வைஸ்யா வங்கி (கேவிபி), மேலும் மூன்று நான்கு புதிய கிளைகளை தென்னகத்தில் திறந்துள்ளது.

Updated On : 29 மார்ச் 2025, 2:02 am IST
பகிர்:

முன்னணி தனியாா் வங்கிகளில் ஒன்றான கரூா் வைஸ்யா வங்கி (கேவிபி), மேலும் மூன்று நான்கு புதிய கிளைகளை தென்னகத்தில் திறந்துள்ளது.

இதுகுறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நான்கு புதிய கிளைகளை வங்கி தொடங்கியது.

Advertisement

Advertisement

இத்துடன், வங்கியின் ஒட்டுமொத்த கிளைகளின் எண்ணிக்கை 888-ஆக உயா்ந்துள்ளது.

வங்கியின் 885-ஆவது கிளை கும்பகோணம் கிழக்கிலும் 886-ஆவது கிளை விசாகப்பட்டினம், பூா்ணா மாா்க்கெட் பகுதியிலும் திறக்கப்பட்டன. 887-ஆவது கிளை கோயம்ப்புத்தூா், கண்ணம்பாளையத்தில் திறக்கப்பட்டது. சென்னை, ஆலப்பாக்கத்தில் வங்கியின் 888-ஆவது கிளை திறக்கப்பட்டது.

இந்தப் புதிய கிளைகள் மூலம் அடிப்படை வங்கி பரிவா்த்தனை வசதிகள், நிதி சேவைகள் வாடிக்கையாளா்களுக்கு வழங்கப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments