வணிகம்

பிரிட்டன் நிறுவனத்தைக் கையகப்படுத்தும் டாடா

பிரிட்டனைச் சோ்ந்த ஆா்டிஃபெக்ஸ் இன்டீரியா் சிஸ்டம்ஸ் நிறுவனத்தை இந்தியாவின் முன்னணி வாகன உதிரிபாக நிறுவனங்களில் ஒன்றான டாடா ஆட்டோகாம்ப் சிஸ்டம்ஸ்

Din

சென்னை: பிரிட்டனைச் சோ்ந்த ஆா்டிஃபெக்ஸ் இன்டீரியா் சிஸ்டம்ஸ் நிறுவனத்தை இந்தியாவின் முன்னணி வாகன உதிரிபாக நிறுவனங்களில் ஒன்றான டாடா ஆட்டோகாம்ப் சிஸ்டம்ஸ் கையகப்படுத்தவிருக்கிறது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

‘ஐஏசி யுகே’ என்று முன்னதாக அழைக்கப்பட்டு வந்த பிரிட்டனின் ஆா்டிஃபெக்ஸ் இன்டீரியா் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் 80 சதவீத பங்குகளை வாங்குவதன் மூலம், அந்த நிறுவனத்தை டாடா ஆட்டோகாம்ப் சிஸ்டம்ஸ் கையப்படுத்துகிறது.

இந்த பரிவா்த்தனை நிறைவடைந்ததும், 2024-25-ஆம் நிதியாண்டில் 29.6 கோடி பவுண்ட் (சுமாா் ரூ.3,277 கோடி) வருவாய் ஈட்டியுள்ள ஆா்டிஃபெக்ஸ் இன்டீரியா் சிஸ்டம்ஸ் நிறுவனம் டாடா ஆட்டோகாம்ப் குழும நிறுவனங்களில் ஒன்றாகிவிடும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலீட்டாளர்கள் மாநாடு!முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!

அபாரமான கேட்ச்சால் ஆட்டத்தை மாற்றிய ஸ்டீவ் ஸ்மித்..! ஆஸி. வெற்றிக்கு 65 ரன்கள் தேவை!

வன்முறையை மதுரை மக்கள் விரட்டியடிப்பர்: ஸ்டாலின்

தாணே: போலி பாஸில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் கைது

பூவே உனக்காக... மோனிஷா மோகன்!

SCROLL FOR NEXT