முகப்பு
வணிகம்

ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியின் 2-வது காலாண்டு லாபம் உயர்வு!

செப்டம்பர் 2025 உடன் முடிவடைந்த 2-வது காலாண்டில் ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி ரூ.11.8 கோடி லாபத்தை ஈட்டியுள்ளது.

Updated On : 10 நவம்பர் 2025, 7:10 pm IST
பகிர்:

புதுதில்லி: செப்டம்பர் 2025 உடன் முடிவடைந்த 2-வது காலாண்டில் ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி ரூ.11.8 கோடி லாபத்தை ஈட்டியுள்ளது. கடந்த வருடத்திற்கு முன்பு இருந்ததை விட இது சற்று அதிகமாகும்.

நிதியாண்டின் 2-வது காலாண்டு அதன் வருவாய் ரூ.804 கோடியாக இருந்தது. இது ஆண்டுக்கு ஆண்டு 19.4% அதிகரித்து வலுவான வளர்ச்சியை பதிவு செய்தது.

காலாண்டில் வங்கி லாபம் ரூ.11.8 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் இது ரூ.11.2 கோடியாக இருந்தது. அதே வேளையில், முதல் முறையாக, வங்கியின் காலாண்டு வருவாய் ரூ.800 கோடி தாண்டியுள்ளது.

Advertisement

எங்கள் நிலையான வளர்ச்சி, வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும் இதன் மூலம் பிரதிபலிக்கிறது என்றார் ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அனுப்ரதா பிஸ்வாஸ்.

இதையும் படிக்க: இந்திய பங்குச் சந்தையில் மாபெரும் எழுச்சி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் நிறைவு!

summary

Airtel Payments Bank has posted a profit of Rs 11.8 crore for the second quarter ended 30, 2025, marginally higher than a year ago.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.