துபாயில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்ற விமான கண்காட்சிகளில், இந்திய விமானப்படைக்கு சொந்தமான தேஜஸ் போர் விமானம் சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது விபத்துக்குள்ளானது.
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் தயாரித்த இந்த இலகு ரக போர் விமானம் துபாய் நேரப்படி சுமார் 2:10 மணியளவில் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட தேஜஸ் விமானம் லேசான, ஒற்றை என்ஜின் கொண்ட போர் விமானமாகும்.பார்வையாளர்கள் பார்த்துக்கொண்டிருந்த நிலையில், விமானம் கீழே விழுந்து நொறுங்கி அடர்த்தியான புகை மண்டலம் எழுந்தது.விமான விபத்தில் விமானி உயிரிழந்ததாக இந்திய விமானப்படை உறுதி செய்துள்ளது.