சிபிஐசி தலைவராக விவேக் சதுர்வேதி நியமனம்!
மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் தலைவராக இந்திய வருவாய் சேவை அதிகாரியான விவேக் சதுர்வேதியை மத்திய அரசு நியமித்துள்ளது.
புதுதில்லி: மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் தலைவராக இந்திய வருவாய் சேவை அதிகாரியான விவேக் சதுர்வேதியை மத்திய அரசு நியமித்துள்ளது.
நவம்பர் 28, 2025 அன்று பணி ஓய்வு பெற்ற சஞ்சய் குமார் அகர்வாலுக்குப் பிறகு இவர் பதவியேற்கிறார்.
இந்திய வருவாய் சேவையின் 1990 பிரிவை செர்ந்த (IRS) அதிகாரியான சதுர்வேதி, தற்போது சிபிஐசி வாரியத்தின் உறுப்பினராக உள்ளார்.
Advertisement
Advertisement
இதற்கிடையில், மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் உறுப்பினர் விவேக் சதுர்வேதியை மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் தலைவர் பதவிக்கு நியமிக்க அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக பணியாளர் மற்றும் பயிற்சித் துறை உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7% ஆக உயர்வு: கிரிசில்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.