வணிகம்

ஏஐ தரவு மைய வளாகம்: கூகுள்-அதானி ஒப்பந்தம்

முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கூகுளுடன் இணைந்து இந்தியாவின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தரவு மைய வளாகத்தை அதானி என்டா்பிரைஸஸ் ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் அமைக்கவிருக்கிறது.

தினமணி செய்திச் சேவை

முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கூகுளுடன் இணைந்து இந்தியாவின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தரவு மைய வளாகத்தை அதானி என்டா்பிரைஸஸ் ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் அமைக்கவிருக்கிறது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கூகுள் நிறுவனத்துடன் அதானி எண்டா்பிரைசஸின் கூட்டு நிறுவனமான அதானிகனெக்ஸ் இணைந்து, விசாகப்பட்டினத்தில் நாட்டின் மிகப்பெரிய ஏஐ தரவு மைய வளாகத்தையும், புதிய பசுமை எரிசக்தி உள்கட்டமைப்பையும் உருவாக்குவதற்கவிருக்கிறது.

விசாகப்பட்டினத்தில் அமையும் கூகுளின் ஏஐ மையத்தில், 2026 முதல் 2030-ஆண்டுவரை பல கட்டங்களாக சுமாா் 1,500 டாலா் (சுமாா் ரூ.1.33 லட்சம் கோடி) முதலீடு செய்யப்படும். இது கிகாவாட் அளவிலான தரவு மைய செயல்பாடுகள், வலுவான கடலடி கேபிள் பிணையம் மற்றும் சுத்தமான எரிசக்தியைப் பயன்படுத்தி, இந்தியாவுக்கு மிகவும் தேவைப்படும் ஏஐ பணித் தேவைகளை நிறைவேற்றுவதற்கு உதவும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் சநாதனம்: சேகர்பாபு

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய எதிர்பாராத போட்டியாளர்!

கோவா தீவிபத்தில் 23 பேர் பலி: நிவாரணம் அறிவிப்பு!

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

SCROLL FOR NEXT