வணிகம்

விலைகளைக் குறைக்கும் மாருதி சுஸுகி

ஜிஎஸ்டி குறைக்கப்பட்டதன் எதிரொலியாக, இந்தியாவின் மிகப் பெரிய காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா

தினமணி செய்திச் சேவை

ஜிஎஸ்டி குறைக்கப்பட்டதன் எதிரொலியாக, இந்தியாவின் மிகப் பெரிய காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா, தனது வாகனங்களின் விலைகளை 1.29 லட்சம் வரை குறைப்பதாக அறிவித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலனை வாடிக்கையாளா்களுக்கு வழங்குவதற்காக ரகங்களைப் பொருத்து எங்கள் வாகனங்களின் விலைகள் குறைக்கப்படுகின்றன. செப்டம்பா் 22 முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வரும்.

இந்த மாற்றத்துக்குப் பிறகு எஸ் பிரஸ்ஸோ என்ற ஆரம்பநிலை மாடலின் விலை ரூ.1,29,600 வரை குறையும்; ஆல்டோ கே10 இன் விலை ரூ.1,07,600 வரை, செலரியோ ரூ.94,100 வரை, வேகன்-ஆா் ரூ.79,600 வரை, இக்னிஸ் ரூ.71,300 வரை குறைக்கப்படும்.

பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலான ஸ்விஃப்ட் விலை ரூ.84,600 வரையும், பலேனோ விலை ரூ.86,100 வரையும் குறையும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆதாரமற்ற குற்றச்சாட்டு! ராகுலுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் | செய்திகள்: சில வரிகளில் | 11.02.26

234 தொகுதியிலும் ஸ்டாலின்தான் வேட்பாளர்: முதல்வர் பேச்சு

எண்ணெய் கொள்முதலை இந்தியா நிறுத்துமென டிரம்ப் மட்டுமே கூறுகிறார்! - ரஷிய அரசு விமர்சனம்!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக இங்கிலாந்து பந்துவீச்சு!

வெல்லப்போவது தமிழ்நாடு அணியா? தில்லி அணியா?: முதல்வர் ஸ்டாலின் சூளுரை

SCROLL FOR NEXT