நவராத்திரி தொடங்கிய பிறகு 75 ஆயிரத்தைக் கடந்த மாருதி விற்பனை
ஜிஎஸ்டி குறைப்புடன் தொடங்கிய நவராத்திரியில் இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தியாளரான மாருதி சுஸுகியின் சில்லறை விற்பனை 75 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
ஜிஎஸ்டி குறைப்புடன் தொடங்கிய நவராத்திரியில் இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தியாளரான மாருதி சுஸுகியின் சில்லறை விற்பனை 75 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இது குறித்து மாருதி சுஸுகி இந்தியாவின் முதுநிலை செயல் அதிகாரி (சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை) பார்த்தோ பானர்ஜி கூறியதாவது:
கார்களை வாங்குவதற்காக பொதுவாக நாளொன்றுக்கு 40,000 முதல் 45,000 வரை விசாரணைகள் வரும் நிலையில், ஜிஎஸ்டி குறைப்புக்குப் பிறகு நாளொன்றுக்கு 80,000 விசாரணைகளும், 18,000 முன்பதிவுகளும் நடைபெறுகின்றன. நவராத்திரி தொடங்கியதிலிருந்து இதுவரை 75,000 வாகனங்களுக்கும் மேல் விற்பனையாகியுள்ளன.
Advertisement
Advertisement
சிறிய கார்கள் பிரிவில் பெரும் ஆர்வம் காணப்படுகிறது. ஆரம்பநிலை கார்கள் பிரிவில் முன்பதிவு 50 சதவீதம் உயர்ந்துள்ளது என்றார் அவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.