ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 3 சதவீதத்திற்கும் மேல் சரிவு!
தொடர்ந்து 2வது நாளாக வீழ்ச்சியடைந்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் திங்கள்கிழமை அன்று பங்குச் சந்தைகளில் 3 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்து வர்த்தகம் முடிவடைந்தன.
புதுதில்லி: பங்குச் சந்தையின் ஜாம்பவான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், தொடர்ந்து 2வது நாளாக வீழ்ச்சியடைந்து, அதன் பங்குகள் 3 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்து ஒட்டுமொத்த நிஃப்டி 50 குறியீட்டையும் கீழ்நோக்கி இழுத்தது.
இன்றைய வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையில் ரிலையன்ஸ் பங்குகள் 3.41 சதவீதம் சரிந்து ரூ. 1,304.75 என்ற அளவில் வர்த்தகமானது. வர்த்தகத்தின் நடுவில், நிறுவனத்தின் பங்குகள் 4.50 சதவீதம் சரிந்து ரூ. 1,290 என்ற நிலைக்கு சென்றது. அதுவே நிஃப்டி-யில் 3.39 சதவீதம் சரிந்து ரூ. 1,304.70 ஆக நிறைவுபெற்றது.
கடந்த இரண்டு வர்த்தக நாட்களில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 4.68 சதவீதம் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் நிறுவனத்தின் சந்தை மதிப்பில் ரூ. 86,743.14 கோடி சரிந்தது, அதன் சந்தை மதிப்பு ரூ. 18 லட்சம் கோடி என்ற அளவிற்குக் கீழே சரிந்து ரூ. 17,65,649.37 கோடியாக உள்ளது.
Advertisement
மத்திய கிழக்கில் தொடர் பதற்றங்கள் அதிகரித்து வருவதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 110 டாலர் என்ற அளவை கடந்ததால், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட எரிசக்தித் துறை சார்ந்த பங்குகள் கடும் அழுத்தத்தை எதிர்கொண்டு வருகின்றன.