ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.59! 47 காசுகள் உயர்வு!
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 47 காசுகள் உயர்ந்து ரூ.92.59ஆக நிறைவு.
மும்பை: ஈரான் மீதான ராணுவத் தாக்குதல்களை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததாலும், ரிசர்வ் வங்கி தனது முக்கியக் கொள்கை வட்டி விகிதங்களை மாற்றாமல் நடுநிலை நிலைப்பாட்டைத் தொடர்ந்ததாலும், இன்றைய அந்நிய செலவானி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 47 காசுகள் உயர்ந்து ரூ.92.59ஆக நிறைவடைந்தன.
அந்நியச் செலாவணி தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எவையும் கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள் அல்ல என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா உறுதியளித்ததைத் தொடர்ந்து, முதலீட்டாளர்களிடம் நம்பிக்கை வலுப்பெற்றதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.92.92 என்ற அளவில் வர்த்தகத்தைத் தொடங்கி, பிறகு வலுப்பெற்று ரூ.92.56 என்ற நிலையை எட்டியது. முடிவில், அதன் முந்தைய நாள் நிறைவு விலையை விட 47 காசுகள் உயர்ந்து ரூ.92.59ஆக வர்த்தகத்தை நிறைவு செய்தது.
Advertisement