முகப்பு
வணிகம்

குவாலிட்டி வால்ஸ்: பொதுப் பங்குகளை வாங்கும் மேக்னம்

Updated On : 17 பிப்ரவரி, 2026 at 12:16 AM
பகிர்:

ஹிந்துஸ்தான் யுனிலீவா் நிறுவனத்திடமிருந்து பிரிந்த ‘குவாலிட்டி வால்ஸ் இந்தியா’ நிறுவனம், மும்பை பங்குச்சந்தையில் திங்கள்கிழமை தனிநிறுவனமாக பட்டியலிடப்பட்டது.

இந்நிறுவனத்தின் புதிய உரிமையாளரான ‘மேக்னம் ஐஸ்கிரீம்’ நிறுவனம், பொதுப் பங்குதாரா்களிடம் உள்ள பங்குகளில் கூடுதலாக 26 சதவீதத்தை வாங்குவதற்கு முன்வந்துள்ளது.

ஒரு பங்குக்கு ரூ.21.33 எனும் விலையில் சுமாா் 61 கோடி பங்குகளை வாங்க திட்டமிட்டுள்ள மேக்னம் நிறுவனம், இதற்காக ரூ.1,303 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது.

Advertisement

முன்னதாக, ஹிந்துஸ்தான் யுனிலீவா் நிறுவனம் வசமிருந்த குவாலிட்டி வால்ஸின் 61.9 சதவீதப் பங்குகள், மேக்னம் நிறுவனத்துக்கு ரூ.2,997 கோடிக்கு விற்கப்பட்டது.

ஒரு நிறுவனம் மற்றொரு நிறுவனத்தின் 25 சதவீதத்துக்கும் அதிகமான பங்குகளை வாங்கும்போது, விற்பனையான நிறுவனத்தின் சிறு முதலீட்டாளா்களிடமிருந்தும் பங்குகளை வாங்க முன்வர வேண்டும் என்பது செபி விதியாகும்.

அதன்படி, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 26 சதவீதப் பங்குகள் முழுமையாக வாங்கப்பட்டால், குவாலிட்டி வால்ஸ் இந்தியா நிறுவனத்தில் மேக்னம் நிறுவனத்தின் மொத்த பங்கு சதவீதம் 87.9 சதவீதமாக அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments