800 மெகாவாட் திறன் அனல் மின் நிலையம்... ரூ.1,600 கோடி ஆர்டரால் தெர்மாக்ஸ் பங்குகள் உயர்வு!
ரூ.1,600 கோடி மதிப்பிலான ஆர்டரை தெர்மாக்ஸின் துணை நிறுவனம் கையகப்படுத்தியதை அடுத்து தெர்மாக்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை உயர்வுடன் நிறைவு.
ரூ.1,600 கோடி மதிப்பிலான ஆர்டரை தெர்மாக்ஸின் துணை நிறுவனம் கையகப்படுத்தியதை அடுத்து தெர்மாக்ஸ் நிறுவனத்தின் பங்கின் விலை உயர்வுடன் நிறவடைந்தன.
800 மெகாவாட் திறன் கொண்ட 'அல்ட்ரா-சூப்பர் கிரிட்டிகல்' அனல் மின் நிலையத்திற்கான ரூ.1,600 கோடி மதிப்பிலான ஆர்டரை, தெர்மாக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம் வென்றதைத் தொடர்ந்து, நேற்றைய (மார்ச் 30) தொடக்க வர்த்தகத்தில் தெர்மாக்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை உயர்ந்தது முடிந்தன.
நேற்றைய காலை நேர வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையில் தெர்மாக்ஸ் நிறுவனத்தின் பங்கின் விலை ரூ.3,211.50-ஆக வர்த்தகமானது. இது அதன் முந்தைய நாள் முடிவின் விலையிலிருந்து இது 0.60% அதிகமாகும்.
இதற்கிடையில், முந்தைய வர்த்தக அமர்வில், நிறுவனத்தின் பங்கின் விலை ரூ.3,192.35ஆக நிறைவடைந்தது. இது 1.61% சரிவாகும்.
தெர்மாக்ஸ் பங்கு விலை, ஜூலை 17, 2025 அன்று ரூ.4,088.00 என்ற 52 வார உச்சத்தையும், டிசம்பர் 08, 2025 அன்று ரூ.2,744.20 என்ற 52 வார குறைந்தபட்ச நிலையை எட்டியது.
தற்போதைய நிலையில், தெர்மாக்ஸ் பங்கின் விலை அதன் 52 வார உச்ச விலையிலிருந்து 21.91 சதவீதம் குறைவாகவும், 52 வார குறைந்தபட்ச விலையிலிருந்து 16.33 சதவீதம் அதிகமாகவும் வர்த்தகமாகி வருகிறது. அதே வேளையில், நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ. 38,038.86 கோடியாக இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஓராண்டில், தெர்மாக்ஸ் பங்கின் விலை 15 சதவீதம் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.