மும்பை: இன்றைய அந்நிய செலாவணி வர்த்தகத்தில், பலவீனமான உள்நாட்டு பங்குச் சந்தை மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு மத்தியில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 6 காசுகள் குறைந்து ரூ. 90.95 ஆக முடிவடைந்தன.
உள்நாட்டு பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றால் உள்ளூர் வர்த்தகம் வெகுவாக பாதித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், இந்திய ரிசர்வ் வங்கியின் தலையீடு காரணமாக, ரூபாய் மதிப்பு ரூ. 90.91 ஆக தொடங்கி பிறகு ரூ. 90.91 முதல் ரூ.90.97 என்ற குறுகிய வரம்பில் வர்த்தகமானது. பிறகு இது அதன் முந்தைய முடிவிலிருந்து 6 காசுகள் குறைந்து ரூ. 90.95 ஆக நிலைபெற்றது.
நேற்றைய வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து ரூ. 90.89 ஆக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.