பங்குச்சந்தை 
வணிகம்

பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஆட்டோ, ரியல் எஸ்டேட் பங்குகள் உயர்வு!

இன்றைய பங்குச் சந்தை வர்த்தகம் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

பங்குச் சந்தைகள் நேற்று சரிவுடன் நிறைவு பெற்ற நிலையில் இன்று(ஜன. 2) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 85,259.36 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 431.24  புள்ளிகள் அதிகரித்து 85,619.84 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 139.35 புள்ளிகள் உயர்ந்து 26,285.90 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி மாருதி சுசுகி, எம்&எம், ஏசியன் பெயிண்ட்ஸ், பிஇஎல், ஆர்ஐஎல், ஹெச்டிஎஃப்சி வங்கி, என்டிபிசி, டாடா ஸ்டீல் ஆகியவை 1.3 சதவீதம் வரை உயர்ந்து, அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களாக உள்ளன.

அதேநேரத்தில் ஐடிசி 4 சதவீதம் சரிவடைந்த மோசமான இழப்பைச் சந்தித்து வருகிறது. டைட்டன், எச்சிஎல்டெக், ஆக்சிஸ் வங்கி, டெக் மஹிந்திரா ஆகியவை இழப்பில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

நிஃப்டி மிட்கேப் 150, மிட்கேப் 250 குறியீடுகள் முறையே 0.54 சதவீதம், 0.38 சதவீதம் உயர்ந்து வர்த்தகமாகின்றன.

துறைவாரியாக, நிஃப்டி ஆட்டோ, ரியல் எஸ்டேட் லாபமடைந்து வரும் நிஃப்டி எஃப்எம்சிஜி, ஐடி குறியீடுகள் சரிந்து வருகின்றன.

Stock Market: Nifty, Sensex trade higher; Nifty Auto rises to fresh high

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிதம்பரம் தேரோட்டம்! ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

மத்திய உரம், ரசாயன நிறுவனத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

தோட்டம் படத்தில் கீர்த்தி சுரேஷின் புதிய போஸ்டர்!

வயநாடு நிலச்சரிவு: பாதிக்கப்பட்டவர்களுக்கு பிப்ரவரியில் வீடுகள் ஒப்படைப்பு!

சிட்னி டெஸ்ட்டை வெல்லும் முனைப்பில் இங்கிலாந்து.. 12 பேர் கொண்ட அணி அறிவிப்பு!

SCROLL FOR NEXT