வணிகம்

ட்ரென்ட் பங்குகள் 9% சரிவு!

ட்ரென்டின் வருவாய் வளர்ச்சி முதலீட்டாளர்களை ஈர்க்கத் தவறியதைத் தொடர்ந்து அதன் பங்குகள் 9% சரிவுடன் முடிவடைந்தன.

இணையதளச் செய்திப் பிரிவு

புதுதில்லி: டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த 3-வது காலாண்டில், டாடா குழுமத்தின் சில்லறை வர்த்தக நிறுவனமான ட்ரென்டின் வருவாய் வளர்ச்சி முதலீட்டாளர்களை ஈர்க்கத் தவறியதைத் தொடர்ந்து, இன்றைய வர்த்தகத்தில் அதன் பங்குகள் கிட்டத்தட்ட 9% சரிந்தன.

பிஎஸ்இ-யில் நிறுவனத்தின் பங்குகள் 8.62% சரிந்து ரூ.4,047.70 ஆக நிலைபெற்றது. இதுவே வர்த்தக நேரத்தின் போது 9.92% சரிந்து பங்கு ஒன்று ரூ.3,990 ஆக குறைந்தது.

என்எஸ்இ-யில் 8.62% சரிந்து பங்கு ஒன்று ரூ.4,047.60 ஆக இருந்தது.

இதனையடுத்து நிறுவனத்தின் சந்தை மதிப்பானது ரூ.13,570.73 கோடி குறைந்து ரூ.1,43,890.66 கோடியாக உள்ளது.

ட்ரென்ட் லிமிடெட், டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த 3-வது காலாண்டில், அதன் தனிப்பட்ட வருவாயில் 17% வளர்ச்சியைப் பதிவு செய்து ரூ.5,220 கோடியாக இருப்பதாக அறிவித்தது.

கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் ரூ.4,466 கோடி தனிப்பட்ட வருவாயைப் பதிவு செய்திருந்தது நிறுவனம்.

Shares of Trent tanked nearly 9 per cent on Tuesday after the Tata group retail firm revenue growth in the third quarter ended December 31.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் முதல்வா் ஜானகிராமன் படத்துக்கு திமுகவினா் மரியாதை

புதுச்சேரியில் சிவபூஜை மாநாடு இன்று தொடக்கம்

பொங்கல் பரிசு ரூ.5,000 வழங்க புதுச்சேரி முதல்வரிடம் பாஜக கோரிக்கை

புதுச்சேரியில் தேசிய சித்த மருத்துவ தின ஊா்வலம்: முதல்வா் தொடங்கி வைத்தாா்

கருங்கல் அருகே ஓட்டுநா் தற்கொலை

SCROLL FOR NEXT