பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு!
பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியில் வர்த்தகாமவது பற்றி...
வணிகம்பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு!
பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியில் வர்த்தகாமவது பற்றி...
அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போரால், இந்திய பங்குச் சந்தைகள் இன்றும் கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 1653.10 புள்ளிகள் சரிந்து 78,585.75 புள்ளிகளாக தொடங்கிய நிலையில், காலை 10.40 மணியளவில் 78,776.24 புள்ளிகளாக வர்த்தகமாகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 530.85 புள்ளிகள் குறைந்து 24,334.85 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், எச்டிஎஃப்சி வங்கி, எஸ்பிஐ வங்கி, ஐசிசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் சரிவுடனும், பாரதி ஏர்டெல், இன்ஃபோசிஸ், டெக் மகேந்திரா ஆகிய பங்குகள் ஏற்றத்துடனும் வர்த்தகமாகி வருகின்றன.
நிஃப்டி பார்மா, நிஃப்டி வங்கி, நிஃப்டி ஸ்மால்கேப் ஆகிய பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றது.