முகப்பு
வணிகம்

அந்நியச் செலாவணி கையிருப்பை வலுப்படுத்த 252 கோடி டாலர் வாங்கிய ரிசர்வ் வங்கி!

இந்திய ரிசர்வ் வங்கி தனது அந்நியச் செலாவணி கையிருப்பை வலுப்படுத்தும் நோக்கில், ஜனவரி மாதம் சந்தையிலிருந்து டாலரை வாங்கியுள்ளது.

Updated On : 23 மார்ச், 2026 at 5:09 PM
இந்திய ரிசர்வ் வங்கி
பகிர்:

மும்பை: இந்திய ரிசர்வ் வங்கி தனது அந்நியச் செலாவணி கையிருப்பை வலுப்படுத்தும் நோக்கில், ஜனவரி மாதம் சந்தையிலிருந்து டாலரை வாங்கியுள்ளது.

ரிசர்வ் வங்கியானது, ஜனவரி மாதம் 252.6 கோடி (2.526 பில்லியன்) அமெரிக்க டாலரை வாங்கியுள்ளதாக தனது மாதாந்திர அறிக்கையில் இன்று தெரிவித்தது.

தொடர்ந்து ஏழு மாதங்களாக டாலரை விற்பனை செய்த நிலையில், ஜனவரி மாதம் டாலரை வாங்கியுள்ளது ரிசர்வ் வங்கி. இதற்கு முன்பு, மே 2025ல் ரிசர்வ் வங்கி 176.4 கோடி அமெரிக்க டாலரை வாங்கியிருந்தது.

தரவுகளின் அடிப்படையில், ரிசர்வ் வங்கி டிசம்பரில் 10.02 பில்லியன் அமெரிக்க டாலர், நவம்பரில் 9.710 பில்லியன் அமெரிக்க டாலர், அக்டோபரில் 11.877 பில்லியன் அமெரிக்க டாலர், செப்டம்பரில் 7.910 பில்லியன் அமெரிக்க டாலர், ஆகஸ்டில் 7.695 பில்லியன் அமெரிக்க டாலர், ஜூலையில் 2.540 பில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் ஜூன் மாதத்தில் 3.661 பில்லியன் டாலரை விற்பனை செய்தது.

சமீபத்திய அறிக்கையின் அடிப்படையில், ரிசர்வ் வங்கி ஜனவரி மாதம் 27.999 பில்லியன் டாலரை வாங்கியுள்ள நிலையில் 25.473 பில்லியன் டாலரை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

summary

The Reserve Bank of India purchased net USD 2.526 billion of forex from the spot currency market in January.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.