ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 93.04! 14 காசுகள் உயர்வு!
இன்றயை வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 14 காசுகள் உயர்ந்து ரூ.93.04 ஆக நிறைவு.
மும்பை: ரூபாயின் ஏற்ற இறக்கத்தைக் குறைக்கவும், இந்திய ரிசர்வ் வங்கி எடுத்த முயற்சிகளைத் தொடர்ந்து, இன்றயை வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 14 காசுகள் உயர்ந்து ரூ.93.04 ஆக நிறைவுபெற்றது.
ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கைகளை தொடர்ந்து, இந்திய ரூபாய்க்கு சாதகமாக இருந்தாலும், நிலையற்ற அரசியல் சூழலுக்கு மத்தியில், தொடர்ந்து வெளியேறி வரும் வெளிநாட்டு நிதி, வலுப்பெறும் டாலர் மற்றும் உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை உள்ளிட்டவை ரூபாயின் மதிப்பு மீது அழுத்தத்தை ஏற்படுத்தியதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
ஊக வணிக நிலையை கட்டுப்படுத்த, இந்திய ரிசர்வ் வங்கி தனது விதிகளைக் கடுமையாக்கியதுடன், வங்கிகள் தினசரி வணிக முடிவில் 100 மில்லியன் டாலர் அளவை கடந்து, 'நெட் ஓபன் பொசிஷன்' வைத்திருக்க கூடாது என அறிவுறுத்தியது.
Advertisement
Advertisement
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், டாலருக்கு நிகாரன இந்திய ரூபாய் மதிப்பு ரூ.93.13 என்ற அளவில் வர்த்தகத்தை தொடங்கி, பிறகு வேகம் எடுத்து, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.92.79 என்ற உச்சத்தைத் தொட்டு, நேற்றைய முடிவிலிருந்து 14 காசுகள் உயர்ந்து ரூ.93.04ஆக நிறைவுசெய்தது.
The rupee gained 14 paise to close at 93.04 against the US dollar on Monday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.