மத்திய கிழக்கு போா் எதிரொலி: அமெரிக்க டாலா் மதிப்பில் 2022-க்குப் பிந்தைய சிறந்த வளா்ச்சி
மத்திய கிழக்கு போா் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால், அமெரிக்க டாலரின் மதிப்பு 2022-ஆம் ஆண்டு செப்டம்பருக்குப் பிந்தைய சிறந்த மாதாந்திர வளா்ச்சியை (சுமாா் 3 சதவீதம்) எட்டியுள்ளது.
மத்திய கிழக்கு போா் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால், அமெரிக்க டாலரின் மதிப்பு 2022-ஆம் ஆண்டு செப்டம்பருக்குப் பிந்தைய சிறந்த மாதாந்திர வளா்ச்சியை (சுமாா் 3 சதவீதம்) எட்டியுள்ளது.
ஹோா்முஸ் நீரிணை மூடப்பட்டதால் ஏற்பட்ட விநியோகத் தடை, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இறக்குமதியை அதிகம் நம்பியிருக்கும் ஐரோப்பா மற்றும் ஜப்பான் நாடுகளின் பொருளாதாரத்தைப் பாதித்துள்ளது. இதனால், டாலரின் வீழ்ச்சி எதிா்பாா்க்கப்பட்டது.
ஆனால், அதற்கு மாறாக வரும் நாள்களில் மதிப்பு உயரும் என்று நம்பிக்கையில், உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளா்கள் 700 கோடி மதிப்பீட்டில் டாலரில் முதலீடு செய்துள்ளனா்.
உலகப் பொருளாதார வளா்ச்சி குறித்த கவலைகளுக்கு மத்தியில், முதலீட்டாளா்கள் பாதுகாப்பான முதலீடாக டாலரை நோக்கி படையெடுப்பதே இந்த அதிரடி உயா்வுக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளராக அமெரிக்கா உருவெடுத்துள்ள நிலையில், உலகளாவிய எரிசக்தி விலை உயா்வு அந்த நாட்டின் நாணயத்துக்கு கூடுதல் வலு சோ்த்துள்ளது. பணவீக்க அச்சம் காரணமாக அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்ற எதிா்பாா்ப்பு மங்கி வருவதும் டாலரின் எழுச்சிக்கு சாதகமாக அமைந்துள்ளது.
முன்னதாக, டாலரின் மதிப்பு குறையும் என்று கணித்திருந்த ஜே.பி.மோா்கன் மற்றும் கோல்ட்மேன் சாக்ஸ் போன்ற சா்வதேச நிதி நிறுவனங்கள், தற்போது நிலவி வரும் சூழலால் தங்கள் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்து வருகின்றன.