முகப்பு
வணிகம்

சரிந்து மீளும் பங்குச்சந்தை: ஐடி, ஆட்டோ பங்குகள் உயர்வு! ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி!

இன்றைய பங்குச்சந்தை வர்த்தக நிலவரம் பற்றி...

பங்குச்சந்தை - ANI
பகிர்:

பங்குச்சந்தைகள் 2 நாள்கள் உயர்வுடன் நிறைவடைந்த நிலையில் இன்று(மே 15) வர்த்தகம் சரிந்து பின்னர் மீண்டு வருகிறது.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 75,497.10 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 107.62 புள்ளிகள் உயர்ந்து 75,503.39 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 8.35
புள்ளிகள் உயர்ந்து 23,697.95 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

Advertisement

Advertisement

நிஃப்டி மிட்கேப், ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.20, 0.21 சதவீதம் சரிந்து வர்த்தகமாகிறது.

துறைவாரியாக நிஃப்டி ஐடி, ஆட்டோ, எப்எம்சிஜி பங்குகள் உயர்ந்து வரும் நிலையி உலோகப் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன.

நிஃப்டி 50 குறியீடுகளில் டாடா மோட்டார்ஸ், கோல் இந்தியா, அதானி என்டர்பிரைசஸ் அதிக லாபம் பெற்றன.

சென்செக்ஸில் 30ல் அதானி போர்ட்ஸ், டிசிஎஸ், இன்போசிஸ், பவர் கிரிட், ஹெச்சிஎல் டெக் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் என்டிபிசி, எல்&டி, ஏசியன் பெயிண்ட்ஸ், எட்டர்னல், பெல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிந்தும் வர்த்தகமாகின்றன.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 95.86 என்ற அளவில் வர்த்தகம் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Stock Market: Sensex down 400 pts from day high, Nifty below 23,800

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments