வாரத்தின் முதல் நாளில் அதிர்ச்சி கொடுத்த பங்குச் சந்தைகள்!
பங்குச் சந்தைகளில், வாரத்தின் முதல் நாளில் சரிவுடன் வணிகம் தொடங்கி அதிர்ச்சி கொடுத்திருப்பது பற்றி..
வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் 1000 புள்ளிகள் வரையிலும் நிப்டி 23,350க்கும் குறைவாகவும் வர்த்தகமாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு, சர்வதேச அளவில் நிலவும் பதற்றம் மற்றும் அதன் காரணமாக ஏற்பட்டிருக்கும் பொருளாதார காரணிகள், இந்திய ரூபாயின் மதிப்பு சரிவது போன்றவை பங்குச் சந்தைகள் இன்று எதிரொலித்தன.
காலை 9.50 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 1,012.17 புள்ளிகள் வரை சரிவைக் கண்டு 74,225.82 ஆக இருந்தது.
Advertisement
நிப்ஃடியும் 309.35 புள்கள் சரிவடைந்து 23,334.15 வரை சரிந்தது. ஒட்டுமொத்தப் பங்குச் சந்தையிலும் இருந்த 2,686 பங்குகள் சரிவை சந்தித்த நிலையில், வெறம் 730 நிறுவனப் பங்குகள் மட்டுமே எழுச்சியடைந்தன.
மிகப்பெரிய நிறுவனப் பங்குகளின் விலைகள் வீழ்ச்சியை சந்தித்த நிலையில், அதன் தாக்கத்தால் சிறு நிறுவனப் பங்குகளும் 2 சதவிகிதம் அளவுக்கு சரிவடைந்தன.